Thursday, October 25, 2012

மாயாகுளத்தில் குரங்கின் அட்டகாசம்!!

மாயாகுளத்தில் கடந்த ஒரு சில வாரமாக ஊருக்குள் குரங்கு ஒன்று வந்து அட்டகாசம் செய்வதாக ஊரில் உள்ளவர்கள் அச்சம் அடைந்துள்ளனர். இந்த குரங்கு சில வீடுகளுக்கு சென்று சமைத்து வைத்த உணவை சாப்பிட்டு விடுவதாகவும், இன்னும் சில வீட்டுக்கு சென்று கதவை தட்டுவதாகவும் பொது மக்கள் கூறுகிறார்கள்.

இது பற்றி ஊரில் உள்ள பெரியவர்கள் கூறும் போது இந்த குரங்கினால் பெண்களும் சிறுவர்களும் மிகவும் பயபடுகிறார்கள், ஆதலால் வனத்துறைக்கு தகவல் கொடுத்து அந்த குரங்கை பிடித்து செல்லவேண்டும் என்று கேட்டுக்கொண்டுள்ளார்கள். ஒரு சில சிறுவர்கள் பயந்தாலும் பல சிறுவர்கள் அந்த குரங்கை விரட்டி விளையாடி ஆனந்தம் அடைகின்றனர் என்பதுதான் நிதர்சமான உண்மை...

Monday, October 22, 2012

வெளிநாட்டில் ப‌ணிபுரிவ‌ர்க‌ளை புதிய‌ வாக்க‌ள‌ர் சேர்க்கையில் சேர்ப்ப‌து எப்ப‌டி !அதிகாரி விள‌க்க‌ம்!

வாக்க‌ள‌ர் ப‌ட்டிய‌லில் விடுப‌ட்டுள்ள‌ வெளிநாட்டில் ப‌ணி ப‌ரிபுவ‌ர்க‌ளை எப்ப‌டி வாக்க‌ள‌ர் ப‌ட்டிய‌லில் சேர்ப்ப‌து என்று அதிகாரிக‌ளிட‌ம் கேள்வி எழுப்பிய‌ போது,

 மாவட்ட வருவாய் அலுவலர் விஸ்வநாதன் ப‌தில‌ளித்த‌ போது,


வெளிநாட்டில் பணிபுரிபவர்கள் வெளிநாட்டிலிருந்து ஊருக்கு வந்தபிறகு எண்: 6ஏ படிவத்தை பூர்த்தி செய்து வருவாய் கோட்டாட்சியர் அலுவலகம் அல்லது கலெக்டர் அலுவலகத்தில் கொடுத்தால் வாக்காளர் புத்தகத்தின் கடைசி பகுதியில் போட்டோ மற்றும் பெயர் சேர்க்கப்படும். இதற்கு வாக்காளர் அடையாள அட்டை தரப்பட மாட்டாது. தேர்தல் நேரத்தில் அவர்கள் ஊருக்கு வந்தால் தனது பாஸ்போர்ட்டை காட்டி வாக்களிக்கலாம்’ என்றார்.
google-site-verification: googlee59dddba6405f270.html