Thursday, October 25, 2012

மாயாகுளத்தில் குரங்கின் அட்டகாசம்!!

மாயாகுளத்தில் கடந்த ஒரு சில வாரமாக ஊருக்குள் குரங்கு ஒன்று வந்து அட்டகாசம் செய்வதாக ஊரில் உள்ளவர்கள் அச்சம் அடைந்துள்ளனர். இந்த குரங்கு சில வீடுகளுக்கு சென்று சமைத்து வைத்த உணவை சாப்பிட்டு விடுவதாகவும், இன்னும் சில வீட்டுக்கு சென்று கதவை தட்டுவதாகவும் பொது மக்கள் கூறுகிறார்கள்.

இது பற்றி ஊரில் உள்ள பெரியவர்கள் கூறும் போது இந்த குரங்கினால் பெண்களும் சிறுவர்களும் மிகவும் பயபடுகிறார்கள், ஆதலால் வனத்துறைக்கு தகவல் கொடுத்து அந்த குரங்கை பிடித்து செல்லவேண்டும் என்று கேட்டுக்கொண்டுள்ளார்கள். ஒரு சில சிறுவர்கள் பயந்தாலும் பல சிறுவர்கள் அந்த குரங்கை விரட்டி விளையாடி ஆனந்தம் அடைகின்றனர் என்பதுதான் நிதர்சமான உண்மை...

Monday, October 22, 2012

வெளிநாட்டில் ப‌ணிபுரிவ‌ர்க‌ளை புதிய‌ வாக்க‌ள‌ர் சேர்க்கையில் சேர்ப்ப‌து எப்ப‌டி !அதிகாரி விள‌க்க‌ம்!

வாக்க‌ள‌ர் ப‌ட்டிய‌லில் விடுப‌ட்டுள்ள‌ வெளிநாட்டில் ப‌ணி ப‌ரிபுவ‌ர்க‌ளை எப்ப‌டி வாக்க‌ள‌ர் ப‌ட்டிய‌லில் சேர்ப்ப‌து என்று அதிகாரிக‌ளிட‌ம் கேள்வி எழுப்பிய‌ போது,

 மாவட்ட வருவாய் அலுவலர் விஸ்வநாதன் ப‌தில‌ளித்த‌ போது,


வெளிநாட்டில் பணிபுரிபவர்கள் வெளிநாட்டிலிருந்து ஊருக்கு வந்தபிறகு எண்: 6ஏ படிவத்தை பூர்த்தி செய்து வருவாய் கோட்டாட்சியர் அலுவலகம் அல்லது கலெக்டர் அலுவலகத்தில் கொடுத்தால் வாக்காளர் புத்தகத்தின் கடைசி பகுதியில் போட்டோ மற்றும் பெயர் சேர்க்கப்படும். இதற்கு வாக்காளர் அடையாள அட்டை தரப்பட மாட்டாது. தேர்தல் நேரத்தில் அவர்கள் ஊருக்கு வந்தால் தனது பாஸ்போர்ட்டை காட்டி வாக்களிக்கலாம்’ என்றார்.

Thursday, September 27, 2012

மாயாகுளத்தில் ம‌ழை !


மாயாகுளம் மற்றும் சுற்றுவட்டார பகுதியில் வெயில் சுட்டெரித்து வ‌ந்த‌ நிலையில் நேற்று இர‌வு (27-09-12 ) ம‌ழை பெய்ய‌ தொடங்கிய‌து.சுமார் 3 மணி நேரம் ம‌ழை நீடித்தது. இத‌னால் சுற்று வட்டார பகுதியில் நில‌வி வ‌ந்த‌ உஷ்ன‌ம் தணிந்துள்ள‌து. சில‌ மாத‌ங்க‌ளாக‌ க‌டும் வெப்ப‌ம் நில‌வி வ‌ந்த‌தால் மாயாகுளம் மற்றும் அத‌ன் சுற்றுப‌குதிக‌ளில் நீர் வ‌ள‌ம் குறைந்துள்ள‌ நிலையில், தொட‌ர்ந்து ம‌ழை பொழிய‌ வேண்டும் என்ப‌தே அனைவ‌ரின் எதிர்ப்பார்ப்பாகும்.

Monday, September 3, 2012

மாயாகுளத்திற்கு பெருமை தேடி தந்த ஜனாப்.SMH.சேக் முஹம்மது அவர்கள்

நமது ஊரை சேர்ந்த ஜனாப். SMH.சேக் முஹம்மது அவர்களுக்கு கடந்த ஆகஸ்ட் மாதம் 25ஆம் நாள் AMERICAN UNIVERSITY மூலம் இயங்கி வரும் "NEW INTERNATIONAL CHRISTIAN COLLEGE " சமூக சேவைக்கான டாக்டர் பட்டம் வழங்கி கௌரவித்தது என்பதனை மகிழ்ச்சியுடன் தெரியபடுத்தி கொள்கிறேன்.....

AFFILIATED BY: 
  • UNITED NATIONS AS INTERNATIONAL ORGANIZATION. 
  • UNITED NATIONSGLOBAL COMPACT AS GLOBAL ORGANIZATION.
  • UNITED NATIONS ACADEMY IMPACT. 
  • EUROPEAN COMMISSION-AS INTERNATIONAL ACADEMY. 
  • INTERNATIONAL BLUE CROSS (UK) 
  • POWER MINISTRIES INTERNATIONAL (USA) 
  • WORLD PEACE ORGANIZATION (USA)

அவர்களுக்கு இறைவன் மேலும் பல பதவிகளை வழங்குவதற்கும், நீண்ட ஆயுளையும் செல்வத்தையும் வழங்கி மேலும் சேவைகள் செய்ய சஹோதரர்கள் துவா செய்யுங்கள்.

Wednesday, August 29, 2012

மறைந்து வரும் விளையாட்டுகள்


நமது ஊரில் உள்ள மாணவர்கள், மற்றும் வாலிபர்கள் சாயங்காலம் கிரிக்கெட், கைபந்து போன்ற விளையாட்டுக்கள் விளையாடி வந்தனர். இது அவர்களுக்கு ஒரு உடற்பயற்சி போலிருந்தது. ஆனால் தற்போது எல்லோரும் விளையாட்டை மறந்து செல்போன் பக்கம் சென்று விட்டனர். இதனால் போதிய உடற்பயற்சி இல்லாமல் பிற்கால சந்ததிகள் நோய்வாய்பட வாய்ப்புள்ளது.

இதுபற்றி செய்யத் கஸ்ஸாலி அவர்கள் கூறுகையில், இப்போதெல்லாம் யாரும் விளையாட வரமாட்டேன்கிறார்கள், அது மட்டுமின்றி போதிய விளையாட்டு உபகரணங்களும், மைதானமும் இல்லை. ஆதலால் பெரியவர்கள் சிறியவர்களை உற்சாகபடுத்தி விளையாட்டை மேம்படவைக்க வேண்டும் என்று கேட்டுக்கொண்டுள்ளார்.

"மறந்து கொண்டே இருப்பது மக்களின் இயல்பு
நினைவுபடுத்தித் தூண்டிக் கொண்டே இருப்பது எம் கடமை"

மாயாகுளம் செய்திகள்

அஸ்ஸலாமு அழைக்கும்.

இன்று முதல் மாயாகுளம் செய்திகள் என்னும் பிளாக் ஐ துவங்கி உள்ளேன். ஊரில் நடக்கும் நிகழ்வுகளை தயவுசெய்து எனக்கு தெரிவித்து உங்களுடைய ஆதரவை தரும்படி மிக பணிவன்புடன் கேட்டுக்கொள்கிறேன். என்னுடைய அலைபேசி எண்: 9003463162

Mail id: mayasahib@gmail.com, yousuf_fire@yahoo.co.in, iamyousuf@hotmail.co.uk
google-site-verification: googlee59dddba6405f270.html