Friday, February 8, 2013

கீழக்கரை - கடையில் திருட்டு

கீழக்கரையில் எல்.ஐ.சி. முகவர் கடையில் ரூ. 20 ஆயிரம் ரொக்கம் மற்றும் 5 செல்போன்கள் திருடப்பட்டதாக புகார் செய்யப்பட்டுள்ளது.

கீழக்கரை மேலத்தெரு 500 பிளேட் பகுதியைச் சேர்ந்த சேக்முகைதீன் மகன் ராஜாகனி(57). எல்ஐசி முகவராக உள்ளார். இவரது கடை சின்னக்கடைதெரு பகுதியில் உள்ளது.

வியாழக்கிழமை இரவில், இவரது கடையின் பூட்டு உடைக்கப்பட்டு உள்ளே இருந்த ரொக்கம் ரூ.20ஆயிரம் மற்றும் 5செல்போன்கள் திருடப்பட்டிருந்ததாம்.

வெள்ளிக்கிழமை காலை கடைக்கு வந்த ராஜாகனி கடையில் பணம், செல்போன்கள் திருடப்பட்டிருப்பதை அறிந்து காவல் நிலையத்தில் புகார் செய்தார்.

போலீஸார் மோப்பநாயுடன் வந்து சோதனை நடத்தினர். இச்சம்பவம் குறித்து வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Thursday, February 7, 2013

வங்கி, ஆசிரியர் தகுதித் தேர்வுக்கு இலவச பயிற்சி வகுப்பு

ராமநாதபுரத்தில் இம்மாதம் 10 ஆம் தேதி ஞாயிற்றுக்கிழமை முதல் மதுரை எய்ம் நிறுவனத்தினரால் ஆசிரியர் தகுதித் தேர்வு மற்றும் வங்கி தேர்வுகளுக்கான இலவச ஆலோசனை மற்றும் பயிற்சி வகுப்புகள் நடைபெற இருப்பதாக அந்நிறுவனத்தின் நிர்வாகி என்.ஜெயக்குமார் வியாழக்கிழமை தெரிவித்தார்.

ராமநாதபுரம் சிங்காரத்தோப்பு இன்பேன்ட் ஜீசஸ் மெட்ரிக் பள்ளியில் வரும் ஞாயிற்றுக்கிழமை காலை 10 மணி முதல் மாலை 4 மணி வரை மதுரை எய்ம் நிறுவனத்தினரால் ஆசிரியர் தகுதித்தேர்வு மற்றும் வங்கி தேர்வுகளுக்கு இலவச ஆலோசனை மற்றும் பயிற்சி வகுப்புகள் நடத்தப்படும். தேர்வு எழுத விருப்பம் உள்ளவர்கள் இந்த வாய்ப்பை பயன்படுத்திக் கொள்ளுமாறும் மேலும் விபரங்களுக்கு 9486360716 என்ற எண்ணில் தொடர்பு கொள்ளுமாறும் அவர் தெரிவித்துள்ளார்.
google-site-verification: googlee59dddba6405f270.html