Wednesday, March 27, 2013

10ஆம் வகுப்பு தேர்வு தொடங்கியது

இன்று முதல் 10ஆம் வகுப்பு தேர்வு தொடங்கி உள்ளது. மாணவ மாணவியர்களுக்கு மாயாகுளம் செய்திகள் சார்பாக வாழ்த்துகளை தெரிவித்து கொள்கிறேன். இத்துடன் தேர்வு அட்டவணையையும் தேர்வின் நேரத்தையும் இணைகிறேன்.

Time Table For exams

March 27, 2013 – Wednesday – Language I (Tamil I)
March 28, 2013 – Thursday    - Language II (Tamil Paper II)
April 1, 2013      - Monday      - English  I
April 2, 2013      - Tuesday      - English – II
April 5, 2013     – Friday          - Maths
April 8, 2013     – Monday       – Science
April 12, 2013   – Friday          - Social Science


Timings for all exams have a pattern as below:
10am       -10.10 am       – Reading Question Paper
10.10 am  - 10.15 am      - Filling up particulars in Answer Sheet
10.15 am – 12. 45 pm     – Exam duration (2.5 hours)

Tuesday, March 26, 2013

கீழக்கரையில் 3.75 கிலோ கஞ்சா பறிமுதல்: பெண் உள்பட 3 பேர் கைது

கீழக்கரையில் 3.75 கிலோ கஞ்சா பறிமுதல் செய்யப்பட்டது. இது தொடர்பாக பெண் உள்பட 3 பேர் கைது செய்யப்பட்டனர்.

கீழக்கரை ஜின்னா தெருவைச் சேர்ந்தவர் நல்லஇபுராஹீம் (55). இவர் சங்குவெட்டி தெரு கடற்கரைப் பகுதியில் கஞ்சா விற்பதாகப் போலீஸாருக்கு ரகசியத் தகவல் கிடைத்தது.


இதன்பேரில் அப்பகுதிக்கு சென்ற போலீஸார் நல்ல இபுராஹீமிடம் இருந்து 1.25 கிலோ கஞ்சாவைப் பறிமுதல் செய்தனர்.

மேலும் அவரிடம் நடத்திய விசாரணையில், உத்திரகோசமங்கை எக்ககுடி பகுதியைச் சேர்ந்த அப்துல் கபூர் மனைவி ரஹ்மத்நிசா (45), இவரது மருமகன் கமருதீன் (26) ஆகியோரிடமிருந்து கஞ்சா வாங்கியதாகக் கூறினார்.

உடனே போலீஸார் கீழக்கரை புதிய பேருந்து நிலையம் அருகே நின்றிருந்த ரஹ்மத்நிசா, கமருதீன் ஆகியோரைப் பிடித்து விசாரணை செய்தனர்.
அவர்கள் வைத்திருந்த தலா 1.25 கிலோ கஞ்சாவைப் பறிமுதல் செய்தனர்.
இது தொடர்பாக கீழக்கரை போலீஸார் வழக்குப் பதிவு செய்து 3 பேரை கைது செய்ததுடன், 3.75 கிலோ கஞ்சாவையும் பறிமுதல் செய்தனர்.

Tuesday, March 12, 2013

ஏர்வாடியில் கடல் நீரை குடிநீராக்கும் திட்டம் தொடக்கம்


ராமநாதபுரம் மாவட்டம், ஏர்வாடியில் கடல் நீரை குடிநீராக்கும் திட்டம் தொடக்க விழா திங்கள்கிழமை நடைபெற்றது.

ராமநாதபுரம் மாவட்ட ஆட்சியர் நந்தகுமார் தலைமை வகித்தார். முதுகுளத்தூர் சட்டப்பேரவைத் தொகுதி உறுப்பினர் முருகன், கடலாடி ஊராட்சி ஒன்றியத் தலைவர் மூக்கையா ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

இந்திய அறிவியல் தொழில்நுட்பத் துறை செயலர் ராமசாமி, உப்பு வேதியியல் துறை இயக்குநர் போஸ், முதன்மை விஞ்ஞானி ஈஸ்வரன் ஆகியோர் கடல் நீரைக் குடிநீராக்கும் திட்டத்தை தொடக்கி வைத்தனர்.

முன்னதாக, ஏர்வாடி தர்கா ஹக்தார் சபைத் தலைவர் அம்ஜத் ஹுசைன் வரவேற்றார். நிகழ்ச்சியில் மாவட்ட ஆட்சியர் நந்தகுமார் பேசியதாவது:

ராமநாதபுரம் மாவட்ட கடலோரப் பகுதிகளில் குடிநீர்ப் பற்றாக்குறை சற்று அதிகமாகவே உள்ளது. இக் குறையைப் போக்குவதற்காக மத்திய அரசின் சி.எஸ்.எம்.சி.ஆர்.ஐ. நிறுவனம் மூலமாக சில இடங்களில் இத் திட்டங்கள் செயல்படுத்தப்பட்டு வருகின்றன. தற்போது ஏர்வாடியில் தொடக்கப்பட்டுள்ளது.

         


முள்ளிமுனை, காரங்காடு ஆகிய இடங்களிலும், நரிப்பையூரிலும் மத்திய அரசு மற்றும் தனியார் கூட்டு ஒத்துழைப்புடன் சூரிய ஒளி மூலமாக கடல் நீரைக் குடிநீராக்கும் திட்டம் கடந்த மாதம் முதல் செயல்படுத்தப்பட்டு வருகிறது.

இதுபோன்று மாவட்டத்தில் ஏற்கெனவே தொடங்கப்பட்டு தற்போது செயல்படாமல் உள்ள திட்டங்கள் படிப்படியாகச் செயல்பாட்டுக்கு கொண்டு வரப்படும்.

ராமநாதபுரம் மாவட்டத்துக்கு மொத்தம் 78 லட்சம் லிட்டர் தண்ணீர் தேவைப் படுகிறது. இங்கு தற்போது 1 லட்சம் லிட்டர் தண்ணீர் உற்பத்தி செய்யப்படுகிறது. எனவே, பொதுமக்கள் தண்ணீரை முறையாகவும், சிக்கனமாகவும் பயன்படுத்த வேண்டும் என்றார்.

நிகழ்ச்சியில், வட்டார வளர்ச்சி அலுவலர்கள் தங்கராஜ், குருநாதன், ஏர்வாடி ஊராட்சி துணைத் தலைவர் ரகுமத்துல்லாகான், ஒன்றியக் கவுன்சிலர்கள் காதர் பாட்சா, செüந்திரபாண்டி, மன்ற உறுப்பினர்கள் சைனாபேகம், அம்ஜத்உசேன், பத்ரிஸ்கான், ராசு, குமார், சித்ரத்பானு, தில்லைராணி, சுல்தான் செய்யது இபுராகிம், ஷாஜஹான், மாரியம்மாள், செல்வராஜ், சசிகலா, குமார், சுதாகர் மற்றும் ஏராளமான பொதுமக்கள் கலந்து கொண்டனர்.

ஏர்வாடி ஊராட்சி மன்றத் தலைவர் முஹம்மது அலி ஜின்னா நன்றி கூறினார்.

Friday, March 1, 2013

மாயாகுளம் அருகே ம‌ய‌ங்கி விழுந்த‌ அபூர்வ‌ க‌ழுகு!

மாயாகுளம்  அருகே பார‌தி ந‌க‌ர் பகுதியில் அபூர்வமான பாம்பு தின்னி கழுகு ஒன்று மயங்கிய நிலையில் காணப்பட்டது.

கீழக்கரையைச் சேர்ந்த ஆட்டோ ஓட்டுநர் முரளி பாரதி நகர் பகுதியில் ஆட்டோ ஒட்டிச் சென்ற போது, சாலையில் அபூர்வ பறவை ஒன்று மயங்கி விழுவதை கண்டார். அப்பறவையை எடுத்து சென்று கீழக்கரை காவல் நிலையத்தில் ஒப்படைத்தார்.

இக்கழுகு 1.5கிலோ எடையும், 3அடி நீளம் இறகுகளைக் கொண்டதாகும். இது இப்பகுதியில் அரியவகை பறவை.

அப்ப‌ற‌வை பாம்பு தின்னி க‌ழுகு என‌ உறுதி செய்து கால்ந‌டை ம‌ருத்துவ‌ம‌னைக்கு எடுத்து சென்ற‌ன‌ர்.கால்ந‌டை ம‌ருத்துவ‌ர் ப‌ரிசோத‌னை செய்த‌தில் க‌ழிச்ச‌ல் நோய் தாக்கியுள்ள‌து தெரிய‌ வ‌ந்த‌து.ம‌ருத்துவ‌ர்க‌ள் சிகிச்சை அளித்த‌ன‌ர்.

இது குறித்து வ‌ன‌ச்ச‌ர‌க‌ர் ஜெய‌ராம‌ன் கூறியதாவ‌து,விஷ‌ப்பூச்சிக‌ளையே உண‌வாக‌ சாப்பிடும்  இக்க‌ழுகு இப்ப‌குதியில் அரிதாகும் .இப்ப‌குதியை க‌ட‌ந்து போகும் போது க‌ழிச‌ல் நோயால் பாதிக்க‌ப்ப‌ட்டிருந்த‌தால் ம‌ய‌ங்கி கீழே விழுந்துள்ள‌து.மேலும் இது குஞ்சு க‌ழுகு இது ஒரு அடிக்கு மேல் வ‌ள‌ரும்.என்றார்.
google-site-verification: googlee59dddba6405f270.html