Friday, April 12, 2013

முகம்மது சதக் கல்லூரியில் ரத்த தான முகாம்

முகம்மது சதக் பொறியியல் கல்லூரி நாட்டு நலப்பணித் திட்டம்,  அரசு மருத்துவமனை மற்றும் மீனாட்சிமிஷன் ஆராய்ச்சி நிறுவனம் ஆகிய அமைப்புகள்  இணைந்து ரத்த தான முகாமை கல்லூரி வளாகத்தில் நடத்தின.


முகாமுக்கு கல்லூரி முதல்வர் முஹம்மது ஜஹாபர் தலைமை வகித்தார். இயக்குநர்  ஹபீப்முகம்மது சதக்கத்துல்லா முன்னிலை வகித்தார். திட்ட அலுவலர் சிவபாலன்  வரவேற்றார். இதில் மீனாட்சிமிஷன் மருத்துவமனை மருத்துவர் ரவி தலைமையில்,  குழுவினர் கலந்துகொண்டு ரத்தம் சேகரித்தனர்.

முகாமில் 350-க்கும் மேற்பட்ட மாணவ,மாணவியர் ரத்த தானம் செய்தனர்.
 திட்ட அலுவலர் முத்துவேல் நன்றி கூறினார். பேராசிரியர்கள்  கார்த்திகேயன், முகம்மதுரபி, ஷேக் யூசுப் ஆகியோர் கலந்து கொண்டனர்.

No comments:

Post a Comment

google-site-verification: googlee59dddba6405f270.html