Sunday, April 21, 2013

ராமநாதபுரத்தில் ஏப்.28 இலவச இதய அறுவைச் சிகிச்சை முகாம்

ராமநாதபுரம் செய்யது அம்மாள் மேல்நிலைப் பள்ளியில் ஏப்.28 ஆம்  தேதி இதய அறுவைச் சிகிச்சை முகாமை இலவசமாக நடத்த ரோட்டரி சங்கம்  ஏற்பாடு செய்து வருவதாக அச்சங்கத்தின் துணை ஆளுநர் சின்னத்துரை அப்துல்லா தெரிவித்தார்.

இது குறித்து அவர் சனிக்கிழமை கூறியது:
ராமநாதபுரம் ரோட்டரி சங்கம், சென்னை அப்பல்லோ குழந்தைகள் மருத்துவமனை  ஆகியவை இணைந்து செய்யது அம்மாள் மேல்நிலைப் பள்ளி வளாகத்தில் ஏப்.28 ஆம் தேதி காலை 9 மணி முதல் பிற்பகல் 2 மணி வரை இதய அறுவைச் சிகிச்சை முகாமை இலவசமாக நடத்த உள்ளன.

ரோட்டரி சங்க ஆளுநர் ஹெச். ஷாஜகான் முயற்சியில் நடைபெறும் இம்முகாமில்  16 வயதுக்குட்பட்ட அனைத்து குழந்தைகளும் பங்கேற்கலாம். இதில் இதய நோய் சம்பந்தப்பட்டவை கண்டறிந்து தேவைப்பட்டால் இலவச அறுவைச் சிகிச்சை அளிக்கப்படவுள்ளது.

இதய அறுவைச் சிகிச்சை மருத்துவர்களால் பரிந்துரைக்கப்பட்டு வசதியில்லாமல் அறுவைச் சிகிச்சை செய்யாமல் இருந்தாலும்  இம்முகாமில் கலந்து கொண்டு பயன் பெறலாம்.

ஏழைக் குழந்தைகளுக்கு அதிக முக்கியத்துவம் அளிக்கப்படும். மேலும் விவரங்களுக்கு துணை ஆளுநர் சின்னத்துரை அப்துல்லா, செல்பேசி எண்: 98424-21334 அல்லது ரோட்டரி சங்கத் தலைவர் ஜெ. ரமேஷ் பாபு, செல்பேசி: 94425-21964 என்ற எண்ணில் தெரிந்து கொள்ளலாம் எனத் தெரிவித்தார்.

No comments:

Post a Comment

google-site-verification: googlee59dddba6405f270.html