Friday, October 4, 2013

அரசு போக்குவரத்துக் கழகத்தில் தொழில்பழகுநருக்கு பதிவு மூப்பு பரிந்துரை

தமிழ்நாடு அரசுப் போக்குவரத்துக் கழகம் கும்பகோணம் கோட்டத்திற்கு தொழிற்பழகுநர் பயிற்சிக்கு பதிவு மூப்புள்ளோர் பரிந்துரைக்கப்பட இருப்பதாக ஆட்சியர் அலுவலகம் வியாழக்கிழமை வெளியிட்ட செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.


செய்தி விவரம்: தமிழ்நாடு அரசு போக்குவரத்துக் கழகம் கும்பகோணம் கோட்ட பொதுமேலாளர் கேட்டுக்கொண்டபடி தொழிற்பழகுநர் பயிற்சிப் பணியிடத்திற்கு பதிவு மூப்பு மற்றும் தகுதியுடைய பதிவுதாரர்கள் மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகம் மூலமாக பரிந்துரைக்கப்படவுள்ளனர். 10 ஆம் வகுப்பு தேர்ச்சியுடன் ஐ.டி.ஐ.யில்(கணினி ஆப்பரேட்டர் புரோகிரோமிங் அஸிஸ்டென்ட்) சான்றிதழ் பெற்று பதிவு செய்திருக்க வேண்டும்.1.7.2013 அன்று அனைத்து வகுப்பினருக்கும் வயது 18 முதல் 28 வரை இருக்க வேண்டும். அரசு விதிமுறைகளின்படி வயது வரம்பில் தளர்வு இல்லை. உத்தேச பதிவு மூப்பு அடிப்படையில் பொதுப்போட்டியாளராக இருந்து முன்னுரிமையற்றவர்கள் அனைவரும் பரிந்துரைக்கபடவும் உள்ளனர். இத்தகுதிகளை உடையோர் ராமநாதபுரம் மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகத்திற்கு தங்களது அனைத்து சான்றிதழ்களுடன் இம்மாதம் 7 ஆம் தேதி வருகை புரிந்து பரிந்துரைக்கப்பட்ட விபரத்தினை தெரிந்து கொள்ளுமாறும் அச்செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

No comments:

Post a Comment

google-site-verification: googlee59dddba6405f270.html