Monday, December 16, 2013

வேலைவாய்ப்பற்றோர் உதவித்தொகை பெற டிச.31க்குள் விண்ணப்பிக்கலாம்

தமிழக அரசால் அறிவிக்கப்பட்ட வேலைவாய்ப்பற்ற இளைஞர்களுக்கான உதவித்தொகை பெற இம்மாதம் 31 ஆம் தேதிக்குள் விண்ணப்பிக்கலாம் என ஆட்சியர் அலுவலகம் வெளியிட்ட செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.


செய்திக்குறிப்பு: தமிழக அரசால் அறிவிக்கப்பட்ட வேலைவாய்ப்பற்ற இளைஞர்களுக்கான உதவித்தொகை திட்டத்தின் கீழ் கடந்த 30.9.2013 உடன் முடிவடைந்த காலாண்டில் வேலைவாய்ப்பு அலுவலகத்தில் பதிவு செய்த ஆதிதிராவிட வகுப்பினர், ஆதிதிராவிட அருந்ததியர்,பழங்குடியினரில் பள்ளியிறுதி வகுப்பு தோல்வி, தேர்ச்சி  பெற்றோர் மற்றும் பட்டப்படிப்பு தேர்ச்சியடைந்த பதிவுதாரர்கள் பதிவு செய்து 5 ஆண்டுகள் முடிவு செய்திருப்பின் உதவித்தொகை வழங்க அறிவிக்கப்பட்டுள்ளது.

மாற்றுத்திறனாளி பதிவுதாரர்கள் பதிவு செய்து ஓராண்டு பெற்றிருந்தாலே உதவித்தொகை பெற தகுதியுடையவர்கள். குடும்ப ஆண்டு வருமானம் ரூ.50 ஆயிரத்துக்கு மிகாமலும், வயது 45 முடிவு பெறாமலும் இருக்க வேண்டும்.

இத்தகுதிகளை உடையவர்கள் வேலைவாய்ப்பு அலுவலக பதிவு அடையாள அட்டை மற்றும் அனைத்து கல்விச் சான்றுகளுடன் இம்மாதம் 31ஆம் தேதி நேரில் வந்து உரிய விண்ணப்பத்தினை பெற்றுக் கொள்ளலாம் எனவும் அச்செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அலுவலக உதவியாளர், சமையலர் பணிக்கு பதிவு மூப்புள்ளோர் பரிந்துரை

ராமநாதபுரம் மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகத்தின் மூலம் அலுவலக உதவியாளர், சமையலர் உள்ளிட்ட பணிகளுக்கு பதிவு மூப்புள்ளோர் பரிந்துரைக்கப்பட இருப்பதாக ஆட்சியர் அலுவலகம் வியாழக்கிழமை வெளியிட்ட செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.



அலுவலக உதவியாளர் பணி: (பதிவு மூப்பு தேதி அடைப்புக் குறிக்குள்) மாவட்டக் கருவூல அலுவலகத்துக்கு அலுவலக உதவியாளர் பணிக்கு பரிந்துரைக்கப்படவுள்ளது.

கல்வித்தகுதியாக 8 ஆம் வகுப்பு தேர்ச்சி பெற்றவராகவும், கடந்த 1.7.2013ன் படி  தாழ்த்தப்பட்ட வகுப்பினர், பழங்குடியினர் வயது 18-35 வரை. பிற்பட்ட வகுப்பினர், மிகவும் பிற்பட்ட வகுப்பினர் வயது 19-32 வரை.  பொதுப்போட்டியாளர் வயது 18-30 வரை. அரது விதிமுறைகளின்படி வயது வரம்பில் தளர்வும் உண்டு.

உத்தேச பதிவு மூப்பு அடிப்படையில் பெண்களாக இருந்து முன்னுரிமையுள்ளவர்களாக இருந்தால் பிற்பட்ட வகுப்பினர்களில் ஆதரவற்ற விதவை(10.5.2011), முன்னுரிமையற்றவர்களாக இருந்து பொதுப்போட்டியாளர்(15.7.1981), மாற்றுத்திறனாளிகள் (9.4.1985) இத்தகுதிகளை உடையோர் அனைத்து சான்றிதழ்களுடன் மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகத்திற்கு இம்மாதம் 17 ஆம் தேதி நேரில் வந்து பரிந்துரை விபரத்தை கேட்டுத் தெரிந்து கொள்ளுமாறும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

காவலர் பணிக்கு பதிவு மூப்புள்ளோர் பரிந்துரை: ராமநாதபுரம் முதன்மைக் குற்றவியல் நீதிமன்றத்துக்கு காவலர் பணிக்கு பதிவு மூப்புள்ளோர் பரிந்துரைக்கப்படவுள்ளனர். எழுதப்படிக்கத் தெரிந்து அதை வேலைவாய்ப்பு அலுவலகத்தில் பதிவு செய்தவராக இருக்க வேண்டும். கடந்த 1.7.2013 அன்று பிற்பட்ட வகுப்பினர் வயது 18-32 வரை இருக்க வேண்டும்,அரசு விதிமுறைகளின்படி வயது வரம்பில் தளர்வும் உண்டு. உத்தேச பதிவு மூப்பு அடிப்படையில் ஆண்கள் மட்டும் முன்னுரிமையுள்ளவர்களாக இருக்கும் (மாற்றுத்திறனாளிகள் தவிர) அனைவரும் பரிந்துரைக்கப்படவுள்ளனர்.

இத்தகுதிகளையுடையோர் ராமநாதபுரம் மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகத்திற்கு நேரில் வந்து இம்மாதம் 16 ஆம் தேதி அனைத்துச் சான்றிதழ்களுடன் நேரில் வந்து பரிந்துரை விபரத்தினை அறிந்து கொள்ளுமாறும் அச்செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Wednesday, December 4, 2013

கீழக்கரை கல்லூரி அருகே வாகன விபத்து! 3 பேர் பலி!

கீழக்கரை அருகே பைக் மீது தனியார் சுற்றுலா பஸ் மோதி மூவர் பலியாகினர்.ராமநாதபுரம் மாவட்டம் சிக்கல் அருகே பெரிய இலை கிராமத்தை சேர்ந்தவர்கள் ராசய்யா (25), செல்லமணி (26), மோகன்தாஸ்(20) ஆகிய மூவரும் கொத்தனார் வேலைக்காக காலை 9 மணிக்கு (ஹெல்மேட் அணியவில்லை) “பைக்’ கில் கீழக்கரை சென்று கொண்டு இருந்தனர்.



கீழக்கரை தனியார் பாலிடெக்னிக் கல்லூரி அருகே வந்த போது, ராமேஸ்வரத்தில் இருந்து திருச்செந்தூர் நோக்கி சென்ற தனியார் சுற்றுலா பஸ், பைக் மீது மோதியது. இதில் சம்பவ இடத்தில் இருவர் பலியாகினர். மோகன் தாஸ் ராமநாதபுரம் அரசு மருத்துவமனையில் இறந்தார். பஸ்சை ஓட்டி வந்த டிரைவர் தலைமறைவானார். ஏர்வாடி போலீசார் விசாரிக்கின்றனர்.
Source from keelakaraitimes.com
google-site-verification: googlee59dddba6405f270.html