Wednesday, December 4, 2013

கீழக்கரை கல்லூரி அருகே வாகன விபத்து! 3 பேர் பலி!

கீழக்கரை அருகே பைக் மீது தனியார் சுற்றுலா பஸ் மோதி மூவர் பலியாகினர்.ராமநாதபுரம் மாவட்டம் சிக்கல் அருகே பெரிய இலை கிராமத்தை சேர்ந்தவர்கள் ராசய்யா (25), செல்லமணி (26), மோகன்தாஸ்(20) ஆகிய மூவரும் கொத்தனார் வேலைக்காக காலை 9 மணிக்கு (ஹெல்மேட் அணியவில்லை) “பைக்’ கில் கீழக்கரை சென்று கொண்டு இருந்தனர்.



கீழக்கரை தனியார் பாலிடெக்னிக் கல்லூரி அருகே வந்த போது, ராமேஸ்வரத்தில் இருந்து திருச்செந்தூர் நோக்கி சென்ற தனியார் சுற்றுலா பஸ், பைக் மீது மோதியது. இதில் சம்பவ இடத்தில் இருவர் பலியாகினர். மோகன் தாஸ் ராமநாதபுரம் அரசு மருத்துவமனையில் இறந்தார். பஸ்சை ஓட்டி வந்த டிரைவர் தலைமறைவானார். ஏர்வாடி போலீசார் விசாரிக்கின்றனர்.
Source from keelakaraitimes.com

No comments:

Post a Comment

google-site-verification: googlee59dddba6405f270.html