மாயாகுளம் அருகே பாரதி நகர் பகுதியில் அபூர்வமான பாம்பு தின்னி கழுகு ஒன்று மயங்கிய நிலையில் காணப்பட்டது.
கீழக்கரையைச் சேர்ந்த ஆட்டோ ஓட்டுநர் முரளி பாரதி நகர் பகுதியில் ஆட்டோ ஒட்டிச் சென்ற போது, சாலையில் அபூர்வ பறவை ஒன்று மயங்கி விழுவதை கண்டார். அப்பறவையை எடுத்து சென்று கீழக்கரை காவல் நிலையத்தில் ஒப்படைத்தார்.
இக்கழுகு 1.5கிலோ எடையும், 3அடி நீளம் இறகுகளைக் கொண்டதாகும். இது இப்பகுதியில் அரியவகை பறவை.
அப்பறவை பாம்பு தின்னி கழுகு என உறுதி செய்து கால்நடை மருத்துவமனைக்கு எடுத்து சென்றனர்.கால்நடை மருத்துவர் பரிசோதனை செய்ததில் கழிச்சல் நோய் தாக்கியுள்ளது தெரிய வந்தது.மருத்துவர்கள் சிகிச்சை அளித்தனர்.
இது குறித்து வனச்சரகர் ஜெயராமன் கூறியதாவது,விஷப்பூச்சிகளையே உணவாக சாப்பிடும் இக்கழுகு இப்பகுதியில் அரிதாகும் .இப்பகுதியை கடந்து போகும் போது கழிசல் நோயால் பாதிக்கப்பட்டிருந்ததால் மயங்கி கீழே விழுந்துள்ளது.மேலும் இது குஞ்சு கழுகு இது ஒரு அடிக்கு மேல் வளரும்.என்றார்.
கீழக்கரையைச் சேர்ந்த ஆட்டோ ஓட்டுநர் முரளி பாரதி நகர் பகுதியில் ஆட்டோ ஒட்டிச் சென்ற போது, சாலையில் அபூர்வ பறவை ஒன்று மயங்கி விழுவதை கண்டார். அப்பறவையை எடுத்து சென்று கீழக்கரை காவல் நிலையத்தில் ஒப்படைத்தார்.
இக்கழுகு 1.5கிலோ எடையும், 3அடி நீளம் இறகுகளைக் கொண்டதாகும். இது இப்பகுதியில் அரியவகை பறவை.
அப்பறவை பாம்பு தின்னி கழுகு என உறுதி செய்து கால்நடை மருத்துவமனைக்கு எடுத்து சென்றனர்.கால்நடை மருத்துவர் பரிசோதனை செய்ததில் கழிச்சல் நோய் தாக்கியுள்ளது தெரிய வந்தது.மருத்துவர்கள் சிகிச்சை அளித்தனர்.
இது குறித்து வனச்சரகர் ஜெயராமன் கூறியதாவது,விஷப்பூச்சிகளையே உணவாக சாப்பிடும் இக்கழுகு இப்பகுதியில் அரிதாகும் .இப்பகுதியை கடந்து போகும் போது கழிசல் நோயால் பாதிக்கப்பட்டிருந்ததால் மயங்கி கீழே விழுந்துள்ளது.மேலும் இது குஞ்சு கழுகு இது ஒரு அடிக்கு மேல் வளரும்.என்றார்.