ராமநாதபுரம் மாவட்டத்தில் 10 மற்றும் 12 ஆம்
வகுப்பு பொதுத்தேர்வில் அதிக மதிப்பெண்கள் பெறும் அரசு பள்ளி மாணவ,
மாணவியருக்குப் பாராட்டுச் சான்றிதழ் வழங்கப்படும் என ஆட்சியர்
க.நந்தகுமார் தெரிவித்துள்ளார்.
இது குறித்து அவர் செவ்வாய்க்கிழமை கூறியது:
அரசுப் பள்ளிகளில் பயிலும் மாணவ, மாணவியர் அரசுத் தேர்வில் நல்ல மதிப்பெண்கள் பெற்று மாவட்ட நிர்வாகத்திற்கும், ஆசிரியர்களுக்கும், பெற்றோர்களுக்கும் நல்ல பெயரைத் தேடித் தர வேண்டும்.
அரசு பொதுத் தேர்வில் 10 ஆம் வகுப்பில் 500-க்கு 475-க்கும் அதிகமான மதிப்பெண்களும், 12 ஆம் வகுப்பில் 1200-க்கு 1175 மதிப்பெண்களும் பெறும் மாணவ, மாணவியருக்கு சுதந்திர தின நன்னாளில் பாராட்டுச் சான்றிதழ்கள், பரிசுகள் வழங்கப்படும் என ஆட்சியர் க.நந்தகுமார் தெரிவித்தார்.
இது குறித்து அவர் செவ்வாய்க்கிழமை கூறியது:
அரசுப் பள்ளிகளில் பயிலும் மாணவ, மாணவியர் அரசுத் தேர்வில் நல்ல மதிப்பெண்கள் பெற்று மாவட்ட நிர்வாகத்திற்கும், ஆசிரியர்களுக்கும், பெற்றோர்களுக்கும் நல்ல பெயரைத் தேடித் தர வேண்டும்.
அரசு பொதுத் தேர்வில் 10 ஆம் வகுப்பில் 500-க்கு 475-க்கும் அதிகமான மதிப்பெண்களும், 12 ஆம் வகுப்பில் 1200-க்கு 1175 மதிப்பெண்களும் பெறும் மாணவ, மாணவியருக்கு சுதந்திர தின நன்னாளில் பாராட்டுச் சான்றிதழ்கள், பரிசுகள் வழங்கப்படும் என ஆட்சியர் க.நந்தகுமார் தெரிவித்தார்.
No comments:
Post a Comment