Saturday, November 23, 2013

ஆசிரியர் தேர்வு வாரியத்தில் தேர்ச்சி பெற்றவர்களுக்கு இன்று பதிவு விவரம் சரிபார்த்தல்

ஆசிரியர் தேர்வு வாரியம் நடத்திய இடைநிலை ஆசிரியர் தேர்வில் தேர்ச்சி பெற்ற ராமநாதபுரத்தைச் சேர்ந்தவர்களுக்கு தங்களது பதிவு விவரங்களை சரிபார்க்கும் பணி சனிக்கிழமை (நவ.23) மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகத்தில் நடைபெற இருப்பதாக ஆட்சியர் அலுவலகம் வெள்ளிக்கிழமை வெளியிட்ட செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

 
 

ஆசிரியர் தேர்வு வாரியம் நடத்திய இடைநிலை ஆசிரியர் தேர்வில் தேர்ச்சி பெற்றவர்கள் தங்களது பதிவு விபரம் சரிபார்க்கும் பொருட்டு அனைத்து சான்றுகளுடனும் மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகத்துக்கு சனிக்கிழமை காலை 10 மணி முதல் மாலை 5 மணிக்குள்ளாக நேரில் வருமாறு தெரிவிக்கப்பட்டுள்ளது.

முதன்மைக் கல்வி அலுவலர் ஆர்.சிவகாமசுந்தரி வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் ராமநாதபுரத்தில் (2012) நடைù பற்ற ஆசிரியர் தகுதித் தேர்வில் தேர்ச்சி பெற்ற தேர்வர்களுக்கு தேர்ச்சி பெற்றதற்கான சான்றிதழ்கள் இம்மாதம் 25 ஆம் தேதி முதல் வரும் டிசம்பர் 5 ஆம் தேதி வரை காலை 10 மணி முதல் மாலை 5.45 மணி வரை வழங்கப்படவுள்ளது. எனவே தேர்ச்சி பெற்றவர்கள் உரிய ஆவணங்களுடன் மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர் அலுவலகத்திற்கு நேரில் வந்து சான்றிதழ்களைப் பெற்றுக் கொள்ளுமாறு தெரிவித்துள்ளார்.

Friday, November 22, 2013

மதுரையிலிருந்து துபாய்க்கு நேரடி விமானம்

மதுரையிலிருந்து துபாய்க்கு, வழியில் நிறுத்தம் ஏதும் இல்லாத நேரடி விமானப் போக்குவரத்து சேவையை ஸ்பைஸ் ஜெட் நிறுவனம் இன்று முதல் துவக்குகிறது.



மதுரையில் இருந்து இரவு 11.30 மணிக்கு கிளம்பும் விமானம் நான்கரை மணி நேரத்தில் துபாய் சென்றடையும். துபாயிலிருந்து அதிகாலை ஐந்து மணிக்கு கிளம்பி காலை 9.45 க்கு இந்தியா வந்தடையும்.

மதுரை மற்றும் அதனை சுற்றி உள்ள தென் மாவட்டங்களில் இருந்து துபாயில் பணி புரிபவர்களுக்கும் அவர்கள் குடும்பத்தினருக்கும் இந்த சேவை பயனுள்ளதாக அமையும்.

Friday, November 15, 2013

எஸ்.எம்.எஸ். மணியார்டர் அமல்! 2 நிமிடத்தில் பணம் பெறலாம்!!

தபால் நிலையங்களில் மணி ஆர்டர் அனுப்பினால், எஸ்.எம்.எஸ். மூலம் 2 நிமிடங்களில் பணத்தை பெற்றுக்கொள்ளும் முறை தமிழகத்தில் அமலுக்கு வருகிறது.



தபால் நிலையங்களில் மணி ஆர்டர் மூலம் பணம் அனுப்பினால், அந்த பணம் உரியருக்கு சென்றடைய சில நாட்கள் ஆகிவிடும் நிலை இருந்தது. இதனால் மணி ஆர்டர் மூலம் பணம் அனுப்புவதை பொதுமக்கள் குறைத்துக் கொண்டனர்.

எஸ்.எம்.எஸ். மணியார்டர் அமல்! 2 நிமிடத்தில் பணம் பெறலாம்!! இந்நிலையில் இந்திய தபால்துறை, செல்போன் மணி ஆர்டர் முறையை அறிமுகப்படுத்தி உள்ளது. இதன்படி, பணம் யார் பெயருக்கு அனுப்பப்படுகிறதோ, அவருக்கு தபால் நிலையத்தில் இருந்து ஒரு எஸ்.எம்.எஸ். அனுப்பப்படும்.

பணம் பெறும் நபர், அருகில் உள்ள தபால் நிலையத்திற்கு சென்று, அந்த எஸ்.எம்.எஸ்.ஐ காட்டி பணத்தை பெற்று கொள்ளலாம். ஆயிரம் முதல் 10 ஆயிரம் ரூபாய் வரை இந்த செல்போன் மணி ஆர்டர் மூலம் அனுப்பலாம் எனவும், இந்த எஸ்.எம்.எஸ். மணியாடர் முறை நவம்பர் 16 சனிக்கிழமை முதல்தமிழகத்தில் அமலுக்கு வருகிறது என இந்திய தபால் துறை தெரிவித்துள்ளது.

Friday, October 11, 2013

ஒருவரிடம் இரு அடையாள அட்டை இருந்தால் கடும் நடவடிக்கை

ஒரு நபரிடம் இரு வாக்காளர் அடையாள அட்டை இருப்பது கண்டு பிடிக்கப்பட்டால் அவர் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என வாக்காளர் பட்டியலுக்கான பார்வையாளர் ஜெ.சந்திரகுமார் எச்சரிக்கை விடுத்துள்ளார்.

ராமநாதபுரம் மாவட்ட ஆட்சியர் அலுவலக ஊராட்சி மன்ற கூட்ட அரங்கில் ஆட்சியர் க.நந்தகுமார் தலைமையில் வாக்காளர் பட்டியலில் சுருக்க திருத்தம் தொடர்பான ஆலோசனைக் கூட்டம் புதன்கிழமை நடைபெற்றது .அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சிகளின் பிரதிநிதிகளாக ஜி.முனியசாமி (அதிமுக மாவட்ட செயலாளர்), அகமது தம்பி (திமுக மாவட்ட துணை செயலாளர்), சட்டப்பேரவை உறுப்பினர் ஜவாஹிருல்லா (மனிதநேய மக்கள் கட்சியின் மாநிலத் தலைவர்), ஆ.ரவிச்சந்திர ராமவன்னி(காங்கிரஸ்), திலீப்குமார்(தேமுதிக), அன்பு பகுருதீன்(தேசியவாத காங்கிரஸ்) உள்பட பல்வேறு கட்சி நிர்வாகிகளும் கலந்து கொண்டனர்.



ஆலோசனைக் கூட்டத்தில் வாக்காளர் பட்டியலுக்கான பார்வையாளர் ஜெ.சந்திரகுமார் பேசியது: வரும் 1.1.2014 அன்று தகுதி நாளாக கொண்டு வரைவு வாக்காளர் பட்டியல் வெளியிடப்படுகிறது.

ராமநாதபுரம் மாவட்டத்தில் 9.82லட்சம் வாக்காளர்கள் உள்ளனர். இதில் ஆண் வாக்காளர்கள்.4,94,300.பெண் வாக்காளர்கள் 4,87,645. இவர்களைத் தவிர இதர வாக்காளர்களாக 55 பேரும் உள்ளனர். வாக்காளர் பட்டியலில் பெயரை நீக்கவும்,சேர்க்கவும்,திருத்தம் செய்யும் பணி 1.10.2013முதல் 31.10.2013வரை நடைபெறவுள்ளது. 1.1.2014 அன்று 18 வயது பூர்த்தியடைந்த நபர்கள் வாக்காளர் பட்டியலில் சேர்த்துக் கொள்ளலாம்.

இது தவிர ஏற்கனவே வாக்காளர் பட்டியலில் பெயர் இருந்து இறந்தவர்கள்,வேறு மாவட்டங்களுக்கு சென்றவர்கள் பெயர்களை நீக்கம் செய்தும் கொள்ளலாம். இதற்காக அனைத்து அரசியல் கட்சியினருக்கும் வாக்காளர் வரைவுப் பட்டியல் பிரதிகளாகவும், குறுந்தகடுகளாகவும் வழங்கப்பட்டிருக்கிறது. இதனைக் கொண்டு அந்தந்த அரசியல் கட்சிகள் தங்கள் பகுதிகளில் சேர்க்க- நீக்க வேண்டிய பணிகளை மேற்கொள்ளலாம்.

எந்த ஒரு நபரிடமும் இரு வாக்காளர் அடையாள அட்டை வைத்திருப்பது தெரிய வந்தால் அவர்கள் மீது கிரிமினல் நடவடிக்கை எடுக்கப்படும். வாக்கு மையங்களில் அதிகப்படியான அளவுக்கு பெயர் சேர்த்தல், நீக்கல் படிவங்கள் வைக்கப்பட்டுள்ளன.

ராமநாதபுரம் மாவட்டத்தில் தற்போது அனைத்து வாக்காளர்களுக்கும் வாக்காளர் அடையாள அட்டை வழங்கப்பட்டிருக்கிறது. இம்மாதம் 20,27 ஆகிய நாட்களில் கல்லூரிகளில் பயிலும் மாணவ,மாணவியர் அருகிலுள்ள மையங்களுக்கு சென்று வாக்காளர்களாக சேர்வதற்கு நடவடிக்கை எடுக்கப்படும். மாவட்டத்தில் 701 இடங்களில் 1225 வாக்குச்சாவடிகள் அமைக்கப்பட்டுள்ளன. கடந்த முறை 1050 வாக்குச்சாவடிகள் மட்டுமே அமைக்கப்பட்டிருந்தன. இந்த ஆண்டு கூடுதலாக 175 வாக்குச்சாவடிகள் அமைக்கப்பட்டுள்ளன. இவற்றில் பெண் வாக்குச்சாவடிகளாக மாற்ற வேண்டிய பகுதிகள் குறித்து தகவல் தெரிவித்தால் பரிசீலனை செய்து நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் தெரிவித்தார்.

Friday, October 4, 2013

அரசு போக்குவரத்துக் கழகத்தில் தொழில்பழகுநருக்கு பதிவு மூப்பு பரிந்துரை

தமிழ்நாடு அரசுப் போக்குவரத்துக் கழகம் கும்பகோணம் கோட்டத்திற்கு தொழிற்பழகுநர் பயிற்சிக்கு பதிவு மூப்புள்ளோர் பரிந்துரைக்கப்பட இருப்பதாக ஆட்சியர் அலுவலகம் வியாழக்கிழமை வெளியிட்ட செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.


செய்தி விவரம்: தமிழ்நாடு அரசு போக்குவரத்துக் கழகம் கும்பகோணம் கோட்ட பொதுமேலாளர் கேட்டுக்கொண்டபடி தொழிற்பழகுநர் பயிற்சிப் பணியிடத்திற்கு பதிவு மூப்பு மற்றும் தகுதியுடைய பதிவுதாரர்கள் மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகம் மூலமாக பரிந்துரைக்கப்படவுள்ளனர். 10 ஆம் வகுப்பு தேர்ச்சியுடன் ஐ.டி.ஐ.யில்(கணினி ஆப்பரேட்டர் புரோகிரோமிங் அஸிஸ்டென்ட்) சான்றிதழ் பெற்று பதிவு செய்திருக்க வேண்டும்.1.7.2013 அன்று அனைத்து வகுப்பினருக்கும் வயது 18 முதல் 28 வரை இருக்க வேண்டும். அரசு விதிமுறைகளின்படி வயது வரம்பில் தளர்வு இல்லை. உத்தேச பதிவு மூப்பு அடிப்படையில் பொதுப்போட்டியாளராக இருந்து முன்னுரிமையற்றவர்கள் அனைவரும் பரிந்துரைக்கபடவும் உள்ளனர். இத்தகுதிகளை உடையோர் ராமநாதபுரம் மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகத்திற்கு தங்களது அனைத்து சான்றிதழ்களுடன் இம்மாதம் 7 ஆம் தேதி வருகை புரிந்து பரிந்துரைக்கப்பட்ட விபரத்தினை தெரிந்து கொள்ளுமாறும் அச்செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Thursday, August 1, 2013

கிழக்கு கடற்கரை ரோடு 4 வழியாக மாற்ற ஆய்வு

ராமநாதபுரத்தில் இருந்து கீழக்கரை வழியாக தூத்துக்குடி செல்லும், கிழக்கு கடற்கரை ரோடு(இ.சி.ஆர்.), நான்கு வழிச்சாலையாக மாற்றுவதற்கான ஆய்வு நடந்து வருகிறது.
 
ராமநாதபுரம் ஆர்.எஸ்.மடையில் இருந்து, தூத்துக்குடிக்கு, தற்போது இருவழிச்சாலை பயன்பாட்டில் உள்ளது. இதை நான்கு வழிச்சாலையாக மாற்ற அரசு முடிவு செய்தது. இதை தொடர்ந்து புதுச்சேரி தனியார் கிராபிக்ஸ் நிறுவனத்தின் மேற்பார்வையில், "டோட்டல் ஸ்டேஷன்' கருவி மூலம் "லெவல் டிராயிங்' பணி மேற்கொண்டுள்ளனர்.
 
இது குறித்து திட்ட மேற்பார்வையாளர் ஒருவர் கூறுகையில், ""ராமநாதபுரம்-தூத்துக்குடி கிழக்கு கடற்கரை சாலையில் 120 கி.மீ., தூர ஆய்வு பணிக்கு மூன்று குழுக்கள் அமைக்கப்பட்டு பணி நடந்து வருகிறது. ஒரு மாதத்திற்குள் சர்வே முடிந்து, ஆய்வு அறிக்கையை ஒப்படைத்து விடுவோம். அடுத்த கட்ட பணி குறித்து, நெடுஞ்சாலைத்துறையினர் ஆலோசனை மேற்கொள்வர்,''என்றார்.

Thursday, May 30, 2013

எஸ்எஸ்எல்சி தேர்வு முடிவுகள்: கலக்கிய மாணவிகள்...

தமிழகம் முழுவதும் 10.50 லட்சம் மாணவ மாணவிகள் எழுதிய எஸ்எஸ்எல்சி (10-ம் வகுப்பு) தேர்வு முடிவுகள் இன்று காலை வெளியானது. ஈரோடு மாவட்டம் பெருந்துறையைச் சேர்ந்த கொங்கு வேளாளர் பள்ளி மாணவி அனுஷா 498 மதிப்பெண்கள் பெற்று முதலிடம் பெற்றுள்ளார். இதேபோல மேலும் 8 மாணவிகள் 498 மதிப்பெண்கள் பெற்றுள்ளனர். முதலிடம் பெற்ற 9 பேருமே மாணவிகள் என்பது குறிப்பிடத்தக்கது. மாணவி 500-க்கு 497 மதிப்பெண்கள் பெற்று மொத்தம் 52 மாணவ மாணவிகள் மாநிலத்தில் இரண்டாம் இடம் பெற்றுள்ளனர். 496 மதிப்பெண்கள் பெற்று 137 மாணவர்கள் மூன்றாம் இடம் பிடித்துள்ளனர்.



இணைய தளங்கள்...

தேர்வு முடிவுகளை கீழ்க்காணும் இணையதள முகவரிகளில் மாணவ-மாணவிகள் தெரிந்துகொள்ளலாம்.

www.tnresults.nic.in
www.dge1.tn.nic.in
www.dge2.tn.nic.in
 www.dge3.tn.nic.in

இலவசமாக... 

பிளஸ்-2 தேர்வு முடிவை ஒவ்வொரு மாவட்டத்திலும் கலெக்டர் அலுவலகத்தில் உள்ள தேசிய தகவலியல் மையத்திலும் (நிக் சென்டர்), அனைத்து மாவட்ட மைய நூலகங்களிலும், கிளை நூலகங்களிலும் மாணவ-மாணவிகள் இலவசமாக தெரிந்துகொள்ள தேர்வுத்துறை ஏற்பாடு செய்யப்பட்டது. அதேபோல, எஸ்.எஸ்.எல்.சி. தேர்வு முடிவையும் எவ்வித கட்டணமும் இல்லாமல் இலவசமாக தெரிந்துகொள்ள ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

மதிப்பெண் பட்டியல்:

மாணவர்களுக்கு மதிப்பெண் பட்டியல் ஜூன் 20ம் தேதி வழங்கப்படும் என தேர்வுத்துறை அறிவித்துள்ளது. பள்ளி மாணவர்கள் சம்பந்தப்பட்ட பள்ளி தலைமை ஆசிரியர்களிடமும், தனி ‌தேர்வர்கள் தேர்வெழுதிய மையங்கள் மூலமாகவும் மதிப்பெண் பட்டியலை பெற்றுக் கொள்ளலாம்.
google-site-verification: googlee59dddba6405f270.html