Monday, December 16, 2013

வேலைவாய்ப்பற்றோர் உதவித்தொகை பெற டிச.31க்குள் விண்ணப்பிக்கலாம்

தமிழக அரசால் அறிவிக்கப்பட்ட வேலைவாய்ப்பற்ற இளைஞர்களுக்கான உதவித்தொகை பெற இம்மாதம் 31 ஆம் தேதிக்குள் விண்ணப்பிக்கலாம் என ஆட்சியர் அலுவலகம் வெளியிட்ட செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.


செய்திக்குறிப்பு: தமிழக அரசால் அறிவிக்கப்பட்ட வேலைவாய்ப்பற்ற இளைஞர்களுக்கான உதவித்தொகை திட்டத்தின் கீழ் கடந்த 30.9.2013 உடன் முடிவடைந்த காலாண்டில் வேலைவாய்ப்பு அலுவலகத்தில் பதிவு செய்த ஆதிதிராவிட வகுப்பினர், ஆதிதிராவிட அருந்ததியர்,பழங்குடியினரில் பள்ளியிறுதி வகுப்பு தோல்வி, தேர்ச்சி  பெற்றோர் மற்றும் பட்டப்படிப்பு தேர்ச்சியடைந்த பதிவுதாரர்கள் பதிவு செய்து 5 ஆண்டுகள் முடிவு செய்திருப்பின் உதவித்தொகை வழங்க அறிவிக்கப்பட்டுள்ளது.

மாற்றுத்திறனாளி பதிவுதாரர்கள் பதிவு செய்து ஓராண்டு பெற்றிருந்தாலே உதவித்தொகை பெற தகுதியுடையவர்கள். குடும்ப ஆண்டு வருமானம் ரூ.50 ஆயிரத்துக்கு மிகாமலும், வயது 45 முடிவு பெறாமலும் இருக்க வேண்டும்.

இத்தகுதிகளை உடையவர்கள் வேலைவாய்ப்பு அலுவலக பதிவு அடையாள அட்டை மற்றும் அனைத்து கல்விச் சான்றுகளுடன் இம்மாதம் 31ஆம் தேதி நேரில் வந்து உரிய விண்ணப்பத்தினை பெற்றுக் கொள்ளலாம் எனவும் அச்செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அலுவலக உதவியாளர், சமையலர் பணிக்கு பதிவு மூப்புள்ளோர் பரிந்துரை

ராமநாதபுரம் மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகத்தின் மூலம் அலுவலக உதவியாளர், சமையலர் உள்ளிட்ட பணிகளுக்கு பதிவு மூப்புள்ளோர் பரிந்துரைக்கப்பட இருப்பதாக ஆட்சியர் அலுவலகம் வியாழக்கிழமை வெளியிட்ட செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.



அலுவலக உதவியாளர் பணி: (பதிவு மூப்பு தேதி அடைப்புக் குறிக்குள்) மாவட்டக் கருவூல அலுவலகத்துக்கு அலுவலக உதவியாளர் பணிக்கு பரிந்துரைக்கப்படவுள்ளது.

கல்வித்தகுதியாக 8 ஆம் வகுப்பு தேர்ச்சி பெற்றவராகவும், கடந்த 1.7.2013ன் படி  தாழ்த்தப்பட்ட வகுப்பினர், பழங்குடியினர் வயது 18-35 வரை. பிற்பட்ட வகுப்பினர், மிகவும் பிற்பட்ட வகுப்பினர் வயது 19-32 வரை.  பொதுப்போட்டியாளர் வயது 18-30 வரை. அரது விதிமுறைகளின்படி வயது வரம்பில் தளர்வும் உண்டு.

உத்தேச பதிவு மூப்பு அடிப்படையில் பெண்களாக இருந்து முன்னுரிமையுள்ளவர்களாக இருந்தால் பிற்பட்ட வகுப்பினர்களில் ஆதரவற்ற விதவை(10.5.2011), முன்னுரிமையற்றவர்களாக இருந்து பொதுப்போட்டியாளர்(15.7.1981), மாற்றுத்திறனாளிகள் (9.4.1985) இத்தகுதிகளை உடையோர் அனைத்து சான்றிதழ்களுடன் மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகத்திற்கு இம்மாதம் 17 ஆம் தேதி நேரில் வந்து பரிந்துரை விபரத்தை கேட்டுத் தெரிந்து கொள்ளுமாறும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

காவலர் பணிக்கு பதிவு மூப்புள்ளோர் பரிந்துரை: ராமநாதபுரம் முதன்மைக் குற்றவியல் நீதிமன்றத்துக்கு காவலர் பணிக்கு பதிவு மூப்புள்ளோர் பரிந்துரைக்கப்படவுள்ளனர். எழுதப்படிக்கத் தெரிந்து அதை வேலைவாய்ப்பு அலுவலகத்தில் பதிவு செய்தவராக இருக்க வேண்டும். கடந்த 1.7.2013 அன்று பிற்பட்ட வகுப்பினர் வயது 18-32 வரை இருக்க வேண்டும்,அரசு விதிமுறைகளின்படி வயது வரம்பில் தளர்வும் உண்டு. உத்தேச பதிவு மூப்பு அடிப்படையில் ஆண்கள் மட்டும் முன்னுரிமையுள்ளவர்களாக இருக்கும் (மாற்றுத்திறனாளிகள் தவிர) அனைவரும் பரிந்துரைக்கப்படவுள்ளனர்.

இத்தகுதிகளையுடையோர் ராமநாதபுரம் மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகத்திற்கு நேரில் வந்து இம்மாதம் 16 ஆம் தேதி அனைத்துச் சான்றிதழ்களுடன் நேரில் வந்து பரிந்துரை விபரத்தினை அறிந்து கொள்ளுமாறும் அச்செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Wednesday, December 4, 2013

கீழக்கரை கல்லூரி அருகே வாகன விபத்து! 3 பேர் பலி!

கீழக்கரை அருகே பைக் மீது தனியார் சுற்றுலா பஸ் மோதி மூவர் பலியாகினர்.ராமநாதபுரம் மாவட்டம் சிக்கல் அருகே பெரிய இலை கிராமத்தை சேர்ந்தவர்கள் ராசய்யா (25), செல்லமணி (26), மோகன்தாஸ்(20) ஆகிய மூவரும் கொத்தனார் வேலைக்காக காலை 9 மணிக்கு (ஹெல்மேட் அணியவில்லை) “பைக்’ கில் கீழக்கரை சென்று கொண்டு இருந்தனர்.



கீழக்கரை தனியார் பாலிடெக்னிக் கல்லூரி அருகே வந்த போது, ராமேஸ்வரத்தில் இருந்து திருச்செந்தூர் நோக்கி சென்ற தனியார் சுற்றுலா பஸ், பைக் மீது மோதியது. இதில் சம்பவ இடத்தில் இருவர் பலியாகினர். மோகன் தாஸ் ராமநாதபுரம் அரசு மருத்துவமனையில் இறந்தார். பஸ்சை ஓட்டி வந்த டிரைவர் தலைமறைவானார். ஏர்வாடி போலீசார் விசாரிக்கின்றனர்.
Source from keelakaraitimes.com

Monday, November 25, 2013

டிச.31க்குள் எரிவாயு சிலிண்டர் எண்ணிக்கையை பதிவு செய்ய வேண்டுகோள்

சமையல் எரிவாயு இணைப்பு எண்ணிக்கை விவரத்தை குடும்ப அட்டையில் பதிவு செய்து கொள்ளுமாறு ஆட்சியர் அலுவலகம் வெளியிட்ட செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

செய்திக்குறிப்பு விவரம்: ராமநாதபுரம் மாவட்டத்தில் மண்ணெண்ணெய் பெற தகுதி படைத்த குடும்ப அட்டைதாரர்களுக்காக விநியோகம் முறைப்படுத்தப்படவுள்ளது.


எனவே மண்ணெண்ணைய் வழங்கு நிலையத்துடன் இணைக்கப்பட்டுள்ள குடும்ப அட்டைதாரர்கள் அவர்களது பகுதியில் உள்ள சம்பந்தப்பட்ட சமையல் எரிவாயு ஏஜென்சியில் சிலிண்டரின் எண்ணிக்கை விவரத்தை புதிதாக முத்திரையிட்டு காண்பித்தவர்களுக்கே நியாய விலைக்கடைகளில் மாதாந்திர மண்ணெண்ணெய் வழங்கப்படும்.

மேலும் சமையல் எரிவாயு ஏஜென்சியினரும் அவர்களது பகுதியில் உள்ள குடும்ப அட்டைதாரர்கள் எரிவாயு சிலிண்டர் விவரத்தினை பதிவு செய்ய வரும் சமயத்தில் குடும்ப அட்டைகளில் வழங்கப்பட்ட சிலிண்டரின் எண்ணிக்கை விவரங்களை பதிவு செய்து கொடுக்கும்படியும் கேட்டுக் கொள்ளப்படுகின்றனர்.

குடும்ப அட்டைதாரர்கள் தங்களது குடும்ப அட்டையில் எரிவாயு இணைப்பு எண்ணிக்கையை வரும் டிசம்பர் 31 ஆம் தேதிக்குள் பதிவு செய்து கொள்ளலாம்.

அவ்வாறு பதிவு செய்யாதவர்களுக்கு வரும் ஜனவரி முதல் தேதி முதல் தகுதியின் அடிப்படையில் மட்டுமே மண்ணெண்ணெய் விநியோகம் செய்யப்படும் எனவும் அச்செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Saturday, November 23, 2013

ஆசிரியர் தேர்வு வாரியத்தில் தேர்ச்சி பெற்றவர்களுக்கு இன்று பதிவு விவரம் சரிபார்த்தல்

ஆசிரியர் தேர்வு வாரியம் நடத்திய இடைநிலை ஆசிரியர் தேர்வில் தேர்ச்சி பெற்ற ராமநாதபுரத்தைச் சேர்ந்தவர்களுக்கு தங்களது பதிவு விவரங்களை சரிபார்க்கும் பணி சனிக்கிழமை (நவ.23) மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகத்தில் நடைபெற இருப்பதாக ஆட்சியர் அலுவலகம் வெள்ளிக்கிழமை வெளியிட்ட செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

 
 

ஆசிரியர் தேர்வு வாரியம் நடத்திய இடைநிலை ஆசிரியர் தேர்வில் தேர்ச்சி பெற்றவர்கள் தங்களது பதிவு விபரம் சரிபார்க்கும் பொருட்டு அனைத்து சான்றுகளுடனும் மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகத்துக்கு சனிக்கிழமை காலை 10 மணி முதல் மாலை 5 மணிக்குள்ளாக நேரில் வருமாறு தெரிவிக்கப்பட்டுள்ளது.

முதன்மைக் கல்வி அலுவலர் ஆர்.சிவகாமசுந்தரி வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் ராமநாதபுரத்தில் (2012) நடைù பற்ற ஆசிரியர் தகுதித் தேர்வில் தேர்ச்சி பெற்ற தேர்வர்களுக்கு தேர்ச்சி பெற்றதற்கான சான்றிதழ்கள் இம்மாதம் 25 ஆம் தேதி முதல் வரும் டிசம்பர் 5 ஆம் தேதி வரை காலை 10 மணி முதல் மாலை 5.45 மணி வரை வழங்கப்படவுள்ளது. எனவே தேர்ச்சி பெற்றவர்கள் உரிய ஆவணங்களுடன் மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர் அலுவலகத்திற்கு நேரில் வந்து சான்றிதழ்களைப் பெற்றுக் கொள்ளுமாறு தெரிவித்துள்ளார்.

Friday, November 22, 2013

மதுரையிலிருந்து துபாய்க்கு நேரடி விமானம்

மதுரையிலிருந்து துபாய்க்கு, வழியில் நிறுத்தம் ஏதும் இல்லாத நேரடி விமானப் போக்குவரத்து சேவையை ஸ்பைஸ் ஜெட் நிறுவனம் இன்று முதல் துவக்குகிறது.



மதுரையில் இருந்து இரவு 11.30 மணிக்கு கிளம்பும் விமானம் நான்கரை மணி நேரத்தில் துபாய் சென்றடையும். துபாயிலிருந்து அதிகாலை ஐந்து மணிக்கு கிளம்பி காலை 9.45 க்கு இந்தியா வந்தடையும்.

மதுரை மற்றும் அதனை சுற்றி உள்ள தென் மாவட்டங்களில் இருந்து துபாயில் பணி புரிபவர்களுக்கும் அவர்கள் குடும்பத்தினருக்கும் இந்த சேவை பயனுள்ளதாக அமையும்.

Friday, November 15, 2013

எஸ்.எம்.எஸ். மணியார்டர் அமல்! 2 நிமிடத்தில் பணம் பெறலாம்!!

தபால் நிலையங்களில் மணி ஆர்டர் அனுப்பினால், எஸ்.எம்.எஸ். மூலம் 2 நிமிடங்களில் பணத்தை பெற்றுக்கொள்ளும் முறை தமிழகத்தில் அமலுக்கு வருகிறது.



தபால் நிலையங்களில் மணி ஆர்டர் மூலம் பணம் அனுப்பினால், அந்த பணம் உரியருக்கு சென்றடைய சில நாட்கள் ஆகிவிடும் நிலை இருந்தது. இதனால் மணி ஆர்டர் மூலம் பணம் அனுப்புவதை பொதுமக்கள் குறைத்துக் கொண்டனர்.

எஸ்.எம்.எஸ். மணியார்டர் அமல்! 2 நிமிடத்தில் பணம் பெறலாம்!! இந்நிலையில் இந்திய தபால்துறை, செல்போன் மணி ஆர்டர் முறையை அறிமுகப்படுத்தி உள்ளது. இதன்படி, பணம் யார் பெயருக்கு அனுப்பப்படுகிறதோ, அவருக்கு தபால் நிலையத்தில் இருந்து ஒரு எஸ்.எம்.எஸ். அனுப்பப்படும்.

பணம் பெறும் நபர், அருகில் உள்ள தபால் நிலையத்திற்கு சென்று, அந்த எஸ்.எம்.எஸ்.ஐ காட்டி பணத்தை பெற்று கொள்ளலாம். ஆயிரம் முதல் 10 ஆயிரம் ரூபாய் வரை இந்த செல்போன் மணி ஆர்டர் மூலம் அனுப்பலாம் எனவும், இந்த எஸ்.எம்.எஸ். மணியாடர் முறை நவம்பர் 16 சனிக்கிழமை முதல்தமிழகத்தில் அமலுக்கு வருகிறது என இந்திய தபால் துறை தெரிவித்துள்ளது.
google-site-verification: googlee59dddba6405f270.html