Sunday, January 5, 2014

கத்தியை காட்டி மிரட்டி வாலிபரிடம் 3 பவுன் தங்க நகை பறிப்பு

மாயாகுளம் அருகே உள்ள புதுமாயாகுளத்தை சேர்ந்தவர் ராமராஜ் என்பவரது மகன் பூமிநாதன்(வயது 30). இவர் தனது மோட்டார் சைக்கிளுக்கு மாத தவணை தொகை செலுத்துவதற்காக ராமநாதபுரம் வந்தார்.



பயோனியர் சோதனை சாவடி பின்புறம் ரெயில்வே தண்டவாளம் அருகே சென்ற போது அங்கு மறைந்து நின்ற மர்ம நபர்கள் சிலர் பூமிநாதனை வழிமறித்து கத்தியை காட்டி மிரட்டி அவர் அணிந்திருந்த 3 பவுன் தங்க சங்கிலியை பறித்துக் கொண்டு தப்பியோடி விட்டனர். இதுகுறித்து பூமிநாதன் ராமநாதபுரம் நகர் போலீஸ் நிலையத்தில் புகார் செய்தார். அதன் பேரில் இன்ஸ்பெக்டர் கணேசன் வழக்கு பதிந்து விசாரித்து வருகிறார்.

Thursday, January 2, 2014

ராமநாதபுரத்தில் ஜன.4இல் வேலைவாய்ப்பு கருத்தரங்கம்

ராமநாதபுரம் மாவட்ட ஆட்சியர் அலுவலக ஊராட்சி மன்ற கூட்ட அரங்கில் வரும் ஜனவரி 4 ஆம் தேதி காலையில் வேலைவாய்ப்பற்ற இளைஞர்களுக்கான வேலைவாய்ப்பு உருவாக்குதல் தொடர்பான கருத்தரங்கம் நடைபெறவுள்ளது.


இக்கருத்தரங்கில் வங்கி அதிகாரிகள், அரசு அலுவலர்கள் உள்பட பலரும் கலந்து கொண்டு, மாவட்டத்தில் தொழில் தொடங்க இருக்கும் வாய்ப்புகள், அரசின் சலுகைகள் குறித்து விளக்கிப் பேசவுள்ளனர். வேலைவாய்ப்பற்ற இளைஞர்கள் இந்த அரிய வாய்ப்பை நல்ல முறையில் பயன்படுத்திக் கொள்ளுமாறு ஆட்சியர் அலுவலகம் வெளியிட்ட செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
google-site-verification: googlee59dddba6405f270.html