மாயாகுளம் அருகே உள்ள புதுமாயாகுளத்தை சேர்ந்தவர் ராமராஜ் என்பவரது மகன் பூமிநாதன்(வயது 30). இவர் தனது மோட்டார் சைக்கிளுக்கு மாத தவணை தொகை செலுத்துவதற்காக ராமநாதபுரம் வந்தார்.

பயோனியர் சோதனை சாவடி பின்புறம் ரெயில்வே தண்டவாளம் அருகே சென்ற போது அங்கு மறைந்து நின்ற மர்ம நபர்கள் சிலர் பூமிநாதனை வழிமறித்து கத்தியை காட்டி மிரட்டி அவர் அணிந்திருந்த 3 பவுன் தங்க சங்கிலியை பறித்துக் கொண்டு தப்பியோடி விட்டனர். இதுகுறித்து பூமிநாதன் ராமநாதபுரம் நகர் போலீஸ் நிலையத்தில் புகார் செய்தார். அதன் பேரில் இன்ஸ்பெக்டர் கணேசன் வழக்கு பதிந்து விசாரித்து வருகிறார்.
No comments:
Post a Comment