Thursday, January 2, 2014

ராமநாதபுரத்தில் ஜன.4இல் வேலைவாய்ப்பு கருத்தரங்கம்

ராமநாதபுரம் மாவட்ட ஆட்சியர் அலுவலக ஊராட்சி மன்ற கூட்ட அரங்கில் வரும் ஜனவரி 4 ஆம் தேதி காலையில் வேலைவாய்ப்பற்ற இளைஞர்களுக்கான வேலைவாய்ப்பு உருவாக்குதல் தொடர்பான கருத்தரங்கம் நடைபெறவுள்ளது.


இக்கருத்தரங்கில் வங்கி அதிகாரிகள், அரசு அலுவலர்கள் உள்பட பலரும் கலந்து கொண்டு, மாவட்டத்தில் தொழில் தொடங்க இருக்கும் வாய்ப்புகள், அரசின் சலுகைகள் குறித்து விளக்கிப் பேசவுள்ளனர். வேலைவாய்ப்பற்ற இளைஞர்கள் இந்த அரிய வாய்ப்பை நல்ல முறையில் பயன்படுத்திக் கொள்ளுமாறு ஆட்சியர் அலுவலகம் வெளியிட்ட செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

No comments:

Post a Comment

google-site-verification: googlee59dddba6405f270.html