ராமநாதபுரம் மாவட்டத்தில் நடப்பு பருவத்தில்
அறுவடையாகக்கூடிய நெல்லினை விவசாயிகளிடமிருந்து கொள்முதல் செய்வதற்கு
ஏதுவாக 51 இடங்களில் நேரடி நெல் கொள்முதல் நிலையங்கள்
திறக்கப்பட்டிருப்பதாக மாவட்ட ஆட்சியர் க.நந்தகுமார் செவ்வாய்க்கிழமை
தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு:
ராமநாதபுரம் வட்டாரத்தில் மாதவனூர், புல்லங்குடி, தொருவளூர்,
காட்டூரணி, வெண்ணாத்தூர். திருப்புல்லாணி வட்டாரத்தில் மல்லல், வைகை,
பரமக்குடி வட்டாரத்தில் வெங்கிட்டான்குறிச்சி, பார்த்திபனூர்.
முதுகுளத்தூர் வட்டாரத்தில் கீரனூர், முதுகுளத்தூர், நல்லூர்,
செல்வநாயகபுரம், திருவரங்கம், காக்கூர், செம்பொன்குடி, தேரிருவேலி,
விளங்களத்தூர்.
கமுதி வட்டாரத்தில் முஷ்டக்குறிச்சி, என்.கரிசல்குளம், கீழராமநதி,
புத்துருத்தி, பெருநாழி, மண்டலமாணிக்கம், டி.புனவாசல், பேரையூர்,
பம்மனேந்தல், கோவிலாங்குளம், காவடிப்பட்டி, கமுதி, ஏ.தரைக்குடி,
பாக்குவெட்டி, கே.வேம்பக்குளம், ஆணையூர், ராமசாமிப்பட்டி, நகரத்தார்
குறிச்சி, கே.பாப்பாகுளம். கடலாடி வட்டாரத்தில் ஓரிவயல், டி.எம்.கோட்டை,
ஏ.புனவாசல், கடலாடி, ஆப்பனூர், சாயல்குடி, மேலச்செல்வனூர், சிக்கல்,
மேலக்கிடாரம்.
போகலூர் வட்டாரத்தில் எஸ்.கொடிக்குளம், சமேனூர். நயினார்கோயில்
வட்டாரத்தில் வல்லம், மேமங்கலம், வாதவனேரி உள்ளிட்ட 51 இடங்களில் தமிழ்நாடு
நுகர்பொருள் வாணிபக் கழகத்தினரால் நேரடி நெல் கொள்முதல் நிலையங்கள்
திறக்கப்பட்டுள்ளன.
விவசாயிகள் தங்கள் விளை நெல்லைக் நேரடி நெல் கொள்முதல் நிலையங்களில்
விற்பனை செய்து உரிய லாபம் பெறுமாறு ஆட்சியர் தெரிவித்துள்ளார்.