“நிச்சயமாக இஸ்லாம் தான் அல்லாஹ்விடத்தில் (ஒப்புக்கொள்ளப்பட்ட) மார்க்கமாகும்”. (அல்குர்ஆன் 3:19)
Thursday, August 1, 2013
Thursday, May 30, 2013
எஸ்எஸ்எல்சி தேர்வு முடிவுகள்: கலக்கிய மாணவிகள்...
தமிழகம் முழுவதும் 10.50 லட்சம் மாணவ மாணவிகள் எழுதிய எஸ்எஸ்எல்சி (10-ம் வகுப்பு) தேர்வு முடிவுகள் இன்று காலை வெளியானது. ஈரோடு மாவட்டம் பெருந்துறையைச் சேர்ந்த கொங்கு வேளாளர் பள்ளி மாணவி அனுஷா 498 மதிப்பெண்கள் பெற்று முதலிடம் பெற்றுள்ளார். இதேபோல மேலும் 8 மாணவிகள் 498 மதிப்பெண்கள் பெற்றுள்ளனர்.
முதலிடம் பெற்ற 9 பேருமே மாணவிகள் என்பது குறிப்பிடத்தக்கது. மாணவி 500-க்கு 497 மதிப்பெண்கள் பெற்று மொத்தம் 52 மாணவ மாணவிகள் மாநிலத்தில் இரண்டாம் இடம் பெற்றுள்ளனர். 496 மதிப்பெண்கள் பெற்று 137 மாணவர்கள் மூன்றாம் இடம் பிடித்துள்ளனர்.
இணைய தளங்கள்...
தேர்வு முடிவுகளை கீழ்க்காணும் இணையதள முகவரிகளில் மாணவ-மாணவிகள் தெரிந்துகொள்ளலாம்.
www.tnresults.nic.in
www.dge1.tn.nic.in
www.dge2.tn.nic.in
www.dge3.tn.nic.in
இலவசமாக...
பிளஸ்-2 தேர்வு முடிவை ஒவ்வொரு மாவட்டத்திலும் கலெக்டர் அலுவலகத்தில் உள்ள தேசிய தகவலியல் மையத்திலும் (நிக் சென்டர்), அனைத்து மாவட்ட மைய நூலகங்களிலும், கிளை நூலகங்களிலும் மாணவ-மாணவிகள் இலவசமாக தெரிந்துகொள்ள தேர்வுத்துறை ஏற்பாடு செய்யப்பட்டது. அதேபோல, எஸ்.எஸ்.எல்.சி. தேர்வு முடிவையும் எவ்வித கட்டணமும் இல்லாமல் இலவசமாக தெரிந்துகொள்ள ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
மதிப்பெண் பட்டியல்:
மாணவர்களுக்கு மதிப்பெண் பட்டியல் ஜூன் 20ம் தேதி வழங்கப்படும் என தேர்வுத்துறை அறிவித்துள்ளது. பள்ளி மாணவர்கள் சம்பந்தப்பட்ட பள்ளி தலைமை ஆசிரியர்களிடமும், தனி தேர்வர்கள் தேர்வெழுதிய மையங்கள் மூலமாகவும் மதிப்பெண் பட்டியலை பெற்றுக் கொள்ளலாம்.
இணைய தளங்கள்...
தேர்வு முடிவுகளை கீழ்க்காணும் இணையதள முகவரிகளில் மாணவ-மாணவிகள் தெரிந்துகொள்ளலாம்.
www.tnresults.nic.in
www.dge1.tn.nic.in
www.dge2.tn.nic.in
www.dge3.tn.nic.in
இலவசமாக...
பிளஸ்-2 தேர்வு முடிவை ஒவ்வொரு மாவட்டத்திலும் கலெக்டர் அலுவலகத்தில் உள்ள தேசிய தகவலியல் மையத்திலும் (நிக் சென்டர்), அனைத்து மாவட்ட மைய நூலகங்களிலும், கிளை நூலகங்களிலும் மாணவ-மாணவிகள் இலவசமாக தெரிந்துகொள்ள தேர்வுத்துறை ஏற்பாடு செய்யப்பட்டது. அதேபோல, எஸ்.எஸ்.எல்.சி. தேர்வு முடிவையும் எவ்வித கட்டணமும் இல்லாமல் இலவசமாக தெரிந்துகொள்ள ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
மதிப்பெண் பட்டியல்:
மாணவர்களுக்கு மதிப்பெண் பட்டியல் ஜூன் 20ம் தேதி வழங்கப்படும் என தேர்வுத்துறை அறிவித்துள்ளது. பள்ளி மாணவர்கள் சம்பந்தப்பட்ட பள்ளி தலைமை ஆசிரியர்களிடமும், தனி தேர்வர்கள் தேர்வெழுதிய மையங்கள் மூலமாகவும் மதிப்பெண் பட்டியலை பெற்றுக் கொள்ளலாம்.
Thursday, May 23, 2013
2013-ம் ஆண்டிற்கான ஆசிரியர் தகுதித் தேர்வு அறிவிப்பு
2013-ஆம் ஆண்டுக்கான தமிழ்நாடு ஆசிரியர் தகுதித் தேர்வு குறித்த அறிவிப்பு இன்று வெளியிடப்பட்டுள்ளது.
இதன்படி வரும் ஜூன் 17-ஆம் தேதி விண்ணப்ப விநியோகம் தொடங்கும் என
அறிவிக்கப்பட்டுள்ளது. பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்களை சமர்ப்பிக்க
கடைசி நாள் ஜூலை 1-ம் தேதி. அன்றைய தேதியில் மாலை 5.30 மணி வரை
விண்ணப்பங்களை அளிக்கலாம்.
தகுதித் தேர்வின் முதல் தாள் தேர்வு ஆகஸ்ட் 17-ஆம் தேதி நடைபெறுகிறது. இரண்டாம் தாள் தேர்வு ஆகஸ்ட் 18-ஆம் தேதி நடத்தப்பட இருக்கிறது. இரண்டு தேர்வுகளும் காலை 10 மணி முதல் பிற்பகல் ஒரு மணி வரை நடைபெறும். அனைத்து அரசு மேல்நிலைப்பள்ளிகளின் தலைமை ஆசிரியர்களிடம் தகுதித் தேர்வுக்கான
விண்ணப்பங்களை பெறலாம்.
தகுதித் தேர்வு முதல் தாள் மற்றும் இரண்டு தாள் ஆகிய இரண்டையும்
எழுதுபவர்கள் தனித்தனியாக விண்ணப்பிக்க வேண்டும். பூர்த்தி செய்யப்பட்ட
விண்ணப்பங்களை அந்தந்த மாவட்ட கல்வி அதிகாரி அலுவலகத்தில் விண்ணப்பத்தாரர்
நேரடியாக ஒப்படைக்க வேண்டும். தபால் மூலமாகவோ, ஆன்லைன் மூலமாகவோ அல்லது
ஆசிரியர் தேர்வு வாரிய அலுவலகத்திற்கோ பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்களை
அனுப்பக்கூடாது.
ஆசிரியர் தகுதித் தேர்வுக்கான விண்ணப்ப கட்டணம் 50 ரூபாய்.
தேர்வுக்கட்டணம் பொதுப்பிரிவினருக்கு 500 ரூபாய். எஸ்.சி.எஸ்.டி மற்றும்
மாற்றுத் திறனாளிகளுக்கு 250 ரூபாய்.
Sunday, April 21, 2013
ராமநாதபுரத்தில் ஏப்.28 இலவச இதய அறுவைச் சிகிச்சை முகாம்
ராமநாதபுரம் செய்யது அம்மாள் மேல்நிலைப் பள்ளியில்
ஏப்.28 ஆம் தேதி இதய அறுவைச் சிகிச்சை முகாமை இலவசமாக நடத்த ரோட்டரி
சங்கம் ஏற்பாடு செய்து வருவதாக அச்சங்கத்தின் துணை ஆளுநர் சின்னத்துரை
அப்துல்லா தெரிவித்தார்.
இது குறித்து அவர் சனிக்கிழமை கூறியது:
ராமநாதபுரம் ரோட்டரி சங்கம், சென்னை அப்பல்லோ குழந்தைகள் மருத்துவமனை ஆகியவை இணைந்து செய்யது அம்மாள் மேல்நிலைப் பள்ளி வளாகத்தில் ஏப்.28 ஆம் தேதி காலை 9 மணி முதல் பிற்பகல் 2 மணி வரை இதய அறுவைச் சிகிச்சை முகாமை இலவசமாக நடத்த உள்ளன.
ரோட்டரி சங்க ஆளுநர் ஹெச். ஷாஜகான் முயற்சியில் நடைபெறும் இம்முகாமில் 16 வயதுக்குட்பட்ட அனைத்து குழந்தைகளும் பங்கேற்கலாம். இதில் இதய நோய் சம்பந்தப்பட்டவை கண்டறிந்து தேவைப்பட்டால் இலவச அறுவைச் சிகிச்சை அளிக்கப்படவுள்ளது.
இதய அறுவைச் சிகிச்சை மருத்துவர்களால் பரிந்துரைக்கப்பட்டு வசதியில்லாமல் அறுவைச் சிகிச்சை செய்யாமல் இருந்தாலும் இம்முகாமில் கலந்து கொண்டு பயன் பெறலாம்.
ஏழைக் குழந்தைகளுக்கு அதிக முக்கியத்துவம் அளிக்கப்படும். மேலும் விவரங்களுக்கு துணை ஆளுநர் சின்னத்துரை அப்துல்லா, செல்பேசி எண்: 98424-21334 அல்லது ரோட்டரி சங்கத் தலைவர் ஜெ. ரமேஷ் பாபு, செல்பேசி: 94425-21964 என்ற எண்ணில் தெரிந்து கொள்ளலாம் எனத் தெரிவித்தார்.
இது குறித்து அவர் சனிக்கிழமை கூறியது:
ராமநாதபுரம் ரோட்டரி சங்கம், சென்னை அப்பல்லோ குழந்தைகள் மருத்துவமனை ஆகியவை இணைந்து செய்யது அம்மாள் மேல்நிலைப் பள்ளி வளாகத்தில் ஏப்.28 ஆம் தேதி காலை 9 மணி முதல் பிற்பகல் 2 மணி வரை இதய அறுவைச் சிகிச்சை முகாமை இலவசமாக நடத்த உள்ளன.
ரோட்டரி சங்க ஆளுநர் ஹெச். ஷாஜகான் முயற்சியில் நடைபெறும் இம்முகாமில் 16 வயதுக்குட்பட்ட அனைத்து குழந்தைகளும் பங்கேற்கலாம். இதில் இதய நோய் சம்பந்தப்பட்டவை கண்டறிந்து தேவைப்பட்டால் இலவச அறுவைச் சிகிச்சை அளிக்கப்படவுள்ளது.
இதய அறுவைச் சிகிச்சை மருத்துவர்களால் பரிந்துரைக்கப்பட்டு வசதியில்லாமல் அறுவைச் சிகிச்சை செய்யாமல் இருந்தாலும் இம்முகாமில் கலந்து கொண்டு பயன் பெறலாம்.
ஏழைக் குழந்தைகளுக்கு அதிக முக்கியத்துவம் அளிக்கப்படும். மேலும் விவரங்களுக்கு துணை ஆளுநர் சின்னத்துரை அப்துல்லா, செல்பேசி எண்: 98424-21334 அல்லது ரோட்டரி சங்கத் தலைவர் ஜெ. ரமேஷ் பாபு, செல்பேசி: 94425-21964 என்ற எண்ணில் தெரிந்து கொள்ளலாம் எனத் தெரிவித்தார்.
Friday, April 12, 2013
முகம்மது சதக் கல்லூரியில் ரத்த தான முகாம்
முகம்மது சதக் பொறியியல் கல்லூரி நாட்டு நலப்பணித் திட்டம், அரசு
மருத்துவமனை மற்றும் மீனாட்சிமிஷன் ஆராய்ச்சி நிறுவனம் ஆகிய அமைப்புகள்
இணைந்து ரத்த தான முகாமை கல்லூரி வளாகத்தில் நடத்தின.
முகாமுக்கு கல்லூரி முதல்வர் முஹம்மது ஜஹாபர் தலைமை வகித்தார். இயக்குநர் ஹபீப்முகம்மது சதக்கத்துல்லா முன்னிலை வகித்தார். திட்ட அலுவலர் சிவபாலன் வரவேற்றார். இதில் மீனாட்சிமிஷன் மருத்துவமனை மருத்துவர் ரவி தலைமையில், குழுவினர் கலந்துகொண்டு ரத்தம் சேகரித்தனர்.
முகாமில் 350-க்கும் மேற்பட்ட மாணவ,மாணவியர் ரத்த தானம் செய்தனர்.
திட்ட அலுவலர் முத்துவேல் நன்றி கூறினார். பேராசிரியர்கள் கார்த்திகேயன், முகம்மதுரபி, ஷேக் யூசுப் ஆகியோர் கலந்து கொண்டனர்.
முகாமுக்கு கல்லூரி முதல்வர் முஹம்மது ஜஹாபர் தலைமை வகித்தார். இயக்குநர் ஹபீப்முகம்மது சதக்கத்துல்லா முன்னிலை வகித்தார். திட்ட அலுவலர் சிவபாலன் வரவேற்றார். இதில் மீனாட்சிமிஷன் மருத்துவமனை மருத்துவர் ரவி தலைமையில், குழுவினர் கலந்துகொண்டு ரத்தம் சேகரித்தனர்.
முகாமில் 350-க்கும் மேற்பட்ட மாணவ,மாணவியர் ரத்த தானம் செய்தனர்.
திட்ட அலுவலர் முத்துவேல் நன்றி கூறினார். பேராசிரியர்கள் கார்த்திகேயன், முகம்மதுரபி, ஷேக் யூசுப் ஆகியோர் கலந்து கொண்டனர்.
Wednesday, March 27, 2013
10ஆம் வகுப்பு தேர்வு தொடங்கியது
இன்று முதல் 10ஆம் வகுப்பு தேர்வு தொடங்கி உள்ளது. மாணவ மாணவியர்களுக்கு மாயாகுளம் செய்திகள் சார்பாக வாழ்த்துகளை தெரிவித்து கொள்கிறேன். இத்துடன் தேர்வு அட்டவணையையும் தேர்வின் நேரத்தையும் இணைகிறேன்.
Time Table For exams
Time Table For exams
March 27, 2013 – Wednesday – Language I (Tamil I)
March 28, 2013 – Thursday - Language II (Tamil Paper II)
April 1, 2013 - Monday - English I
April 2, 2013 - Tuesday - English – II
April 5, 2013 – Friday - Maths
April 8, 2013 – Monday – Science
April 12, 2013 – Friday - Social Science
Timings for all exams have a pattern as below:
10am -10.10 am – Reading Question Paper
10.10 am - 10.15 am - Filling up particulars in Answer Sheet
10.15 am – 12. 45 pm – Exam duration (2.5 hours)
10.10 am - 10.15 am - Filling up particulars in Answer Sheet
10.15 am – 12. 45 pm – Exam duration (2.5 hours)
Tuesday, March 26, 2013
கீழக்கரையில் 3.75 கிலோ கஞ்சா பறிமுதல்: பெண் உள்பட 3 பேர் கைது
கீழக்கரையில் 3.75 கிலோ கஞ்சா பறிமுதல் செய்யப்பட்டது. இது தொடர்பாக பெண் உள்பட 3 பேர் கைது செய்யப்பட்டனர்.
கீழக்கரை ஜின்னா தெருவைச் சேர்ந்தவர் நல்லஇபுராஹீம் (55). இவர் சங்குவெட்டி தெரு கடற்கரைப் பகுதியில் கஞ்சா விற்பதாகப் போலீஸாருக்கு ரகசியத் தகவல் கிடைத்தது.
இதன்பேரில் அப்பகுதிக்கு சென்ற போலீஸார் நல்ல இபுராஹீமிடம் இருந்து 1.25 கிலோ கஞ்சாவைப் பறிமுதல் செய்தனர்.
மேலும் அவரிடம் நடத்திய விசாரணையில், உத்திரகோசமங்கை எக்ககுடி பகுதியைச் சேர்ந்த அப்துல் கபூர் மனைவி ரஹ்மத்நிசா (45), இவரது மருமகன் கமருதீன் (26) ஆகியோரிடமிருந்து கஞ்சா வாங்கியதாகக் கூறினார்.
உடனே போலீஸார் கீழக்கரை புதிய பேருந்து நிலையம் அருகே நின்றிருந்த ரஹ்மத்நிசா, கமருதீன் ஆகியோரைப் பிடித்து விசாரணை செய்தனர்.
அவர்கள் வைத்திருந்த தலா 1.25 கிலோ கஞ்சாவைப் பறிமுதல் செய்தனர்.
இது தொடர்பாக கீழக்கரை போலீஸார் வழக்குப் பதிவு செய்து 3 பேரை கைது செய்ததுடன், 3.75 கிலோ கஞ்சாவையும் பறிமுதல் செய்தனர்.
கீழக்கரை ஜின்னா தெருவைச் சேர்ந்தவர் நல்லஇபுராஹீம் (55). இவர் சங்குவெட்டி தெரு கடற்கரைப் பகுதியில் கஞ்சா விற்பதாகப் போலீஸாருக்கு ரகசியத் தகவல் கிடைத்தது.
இதன்பேரில் அப்பகுதிக்கு சென்ற போலீஸார் நல்ல இபுராஹீமிடம் இருந்து 1.25 கிலோ கஞ்சாவைப் பறிமுதல் செய்தனர்.
மேலும் அவரிடம் நடத்திய விசாரணையில், உத்திரகோசமங்கை எக்ககுடி பகுதியைச் சேர்ந்த அப்துல் கபூர் மனைவி ரஹ்மத்நிசா (45), இவரது மருமகன் கமருதீன் (26) ஆகியோரிடமிருந்து கஞ்சா வாங்கியதாகக் கூறினார்.
உடனே போலீஸார் கீழக்கரை புதிய பேருந்து நிலையம் அருகே நின்றிருந்த ரஹ்மத்நிசா, கமருதீன் ஆகியோரைப் பிடித்து விசாரணை செய்தனர்.
அவர்கள் வைத்திருந்த தலா 1.25 கிலோ கஞ்சாவைப் பறிமுதல் செய்தனர்.
இது தொடர்பாக கீழக்கரை போலீஸார் வழக்குப் பதிவு செய்து 3 பேரை கைது செய்ததுடன், 3.75 கிலோ கஞ்சாவையும் பறிமுதல் செய்தனர்.
Subscribe to:
Posts (Atom)