Monday, December 16, 2013

வேலைவாய்ப்பற்றோர் உதவித்தொகை பெற டிச.31க்குள் விண்ணப்பிக்கலாம்

தமிழக அரசால் அறிவிக்கப்பட்ட வேலைவாய்ப்பற்ற இளைஞர்களுக்கான உதவித்தொகை பெற இம்மாதம் 31 ஆம் தேதிக்குள் விண்ணப்பிக்கலாம் என ஆட்சியர் அலுவலகம் வெளியிட்ட செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.


செய்திக்குறிப்பு: தமிழக அரசால் அறிவிக்கப்பட்ட வேலைவாய்ப்பற்ற இளைஞர்களுக்கான உதவித்தொகை திட்டத்தின் கீழ் கடந்த 30.9.2013 உடன் முடிவடைந்த காலாண்டில் வேலைவாய்ப்பு அலுவலகத்தில் பதிவு செய்த ஆதிதிராவிட வகுப்பினர், ஆதிதிராவிட அருந்ததியர்,பழங்குடியினரில் பள்ளியிறுதி வகுப்பு தோல்வி, தேர்ச்சி  பெற்றோர் மற்றும் பட்டப்படிப்பு தேர்ச்சியடைந்த பதிவுதாரர்கள் பதிவு செய்து 5 ஆண்டுகள் முடிவு செய்திருப்பின் உதவித்தொகை வழங்க அறிவிக்கப்பட்டுள்ளது.

மாற்றுத்திறனாளி பதிவுதாரர்கள் பதிவு செய்து ஓராண்டு பெற்றிருந்தாலே உதவித்தொகை பெற தகுதியுடையவர்கள். குடும்ப ஆண்டு வருமானம் ரூ.50 ஆயிரத்துக்கு மிகாமலும், வயது 45 முடிவு பெறாமலும் இருக்க வேண்டும்.

இத்தகுதிகளை உடையவர்கள் வேலைவாய்ப்பு அலுவலக பதிவு அடையாள அட்டை மற்றும் அனைத்து கல்விச் சான்றுகளுடன் இம்மாதம் 31ஆம் தேதி நேரில் வந்து உரிய விண்ணப்பத்தினை பெற்றுக் கொள்ளலாம் எனவும் அச்செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அலுவலக உதவியாளர், சமையலர் பணிக்கு பதிவு மூப்புள்ளோர் பரிந்துரை

ராமநாதபுரம் மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகத்தின் மூலம் அலுவலக உதவியாளர், சமையலர் உள்ளிட்ட பணிகளுக்கு பதிவு மூப்புள்ளோர் பரிந்துரைக்கப்பட இருப்பதாக ஆட்சியர் அலுவலகம் வியாழக்கிழமை வெளியிட்ட செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.



அலுவலக உதவியாளர் பணி: (பதிவு மூப்பு தேதி அடைப்புக் குறிக்குள்) மாவட்டக் கருவூல அலுவலகத்துக்கு அலுவலக உதவியாளர் பணிக்கு பரிந்துரைக்கப்படவுள்ளது.

கல்வித்தகுதியாக 8 ஆம் வகுப்பு தேர்ச்சி பெற்றவராகவும், கடந்த 1.7.2013ன் படி  தாழ்த்தப்பட்ட வகுப்பினர், பழங்குடியினர் வயது 18-35 வரை. பிற்பட்ட வகுப்பினர், மிகவும் பிற்பட்ட வகுப்பினர் வயது 19-32 வரை.  பொதுப்போட்டியாளர் வயது 18-30 வரை. அரது விதிமுறைகளின்படி வயது வரம்பில் தளர்வும் உண்டு.

உத்தேச பதிவு மூப்பு அடிப்படையில் பெண்களாக இருந்து முன்னுரிமையுள்ளவர்களாக இருந்தால் பிற்பட்ட வகுப்பினர்களில் ஆதரவற்ற விதவை(10.5.2011), முன்னுரிமையற்றவர்களாக இருந்து பொதுப்போட்டியாளர்(15.7.1981), மாற்றுத்திறனாளிகள் (9.4.1985) இத்தகுதிகளை உடையோர் அனைத்து சான்றிதழ்களுடன் மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகத்திற்கு இம்மாதம் 17 ஆம் தேதி நேரில் வந்து பரிந்துரை விபரத்தை கேட்டுத் தெரிந்து கொள்ளுமாறும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

காவலர் பணிக்கு பதிவு மூப்புள்ளோர் பரிந்துரை: ராமநாதபுரம் முதன்மைக் குற்றவியல் நீதிமன்றத்துக்கு காவலர் பணிக்கு பதிவு மூப்புள்ளோர் பரிந்துரைக்கப்படவுள்ளனர். எழுதப்படிக்கத் தெரிந்து அதை வேலைவாய்ப்பு அலுவலகத்தில் பதிவு செய்தவராக இருக்க வேண்டும். கடந்த 1.7.2013 அன்று பிற்பட்ட வகுப்பினர் வயது 18-32 வரை இருக்க வேண்டும்,அரசு விதிமுறைகளின்படி வயது வரம்பில் தளர்வும் உண்டு. உத்தேச பதிவு மூப்பு அடிப்படையில் ஆண்கள் மட்டும் முன்னுரிமையுள்ளவர்களாக இருக்கும் (மாற்றுத்திறனாளிகள் தவிர) அனைவரும் பரிந்துரைக்கப்படவுள்ளனர்.

இத்தகுதிகளையுடையோர் ராமநாதபுரம் மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகத்திற்கு நேரில் வந்து இம்மாதம் 16 ஆம் தேதி அனைத்துச் சான்றிதழ்களுடன் நேரில் வந்து பரிந்துரை விபரத்தினை அறிந்து கொள்ளுமாறும் அச்செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Wednesday, December 4, 2013

கீழக்கரை கல்லூரி அருகே வாகன விபத்து! 3 பேர் பலி!

கீழக்கரை அருகே பைக் மீது தனியார் சுற்றுலா பஸ் மோதி மூவர் பலியாகினர்.ராமநாதபுரம் மாவட்டம் சிக்கல் அருகே பெரிய இலை கிராமத்தை சேர்ந்தவர்கள் ராசய்யா (25), செல்லமணி (26), மோகன்தாஸ்(20) ஆகிய மூவரும் கொத்தனார் வேலைக்காக காலை 9 மணிக்கு (ஹெல்மேட் அணியவில்லை) “பைக்’ கில் கீழக்கரை சென்று கொண்டு இருந்தனர்.



கீழக்கரை தனியார் பாலிடெக்னிக் கல்லூரி அருகே வந்த போது, ராமேஸ்வரத்தில் இருந்து திருச்செந்தூர் நோக்கி சென்ற தனியார் சுற்றுலா பஸ், பைக் மீது மோதியது. இதில் சம்பவ இடத்தில் இருவர் பலியாகினர். மோகன் தாஸ் ராமநாதபுரம் அரசு மருத்துவமனையில் இறந்தார். பஸ்சை ஓட்டி வந்த டிரைவர் தலைமறைவானார். ஏர்வாடி போலீசார் விசாரிக்கின்றனர்.
Source from keelakaraitimes.com

Monday, November 25, 2013

டிச.31க்குள் எரிவாயு சிலிண்டர் எண்ணிக்கையை பதிவு செய்ய வேண்டுகோள்

சமையல் எரிவாயு இணைப்பு எண்ணிக்கை விவரத்தை குடும்ப அட்டையில் பதிவு செய்து கொள்ளுமாறு ஆட்சியர் அலுவலகம் வெளியிட்ட செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

செய்திக்குறிப்பு விவரம்: ராமநாதபுரம் மாவட்டத்தில் மண்ணெண்ணெய் பெற தகுதி படைத்த குடும்ப அட்டைதாரர்களுக்காக விநியோகம் முறைப்படுத்தப்படவுள்ளது.


எனவே மண்ணெண்ணைய் வழங்கு நிலையத்துடன் இணைக்கப்பட்டுள்ள குடும்ப அட்டைதாரர்கள் அவர்களது பகுதியில் உள்ள சம்பந்தப்பட்ட சமையல் எரிவாயு ஏஜென்சியில் சிலிண்டரின் எண்ணிக்கை விவரத்தை புதிதாக முத்திரையிட்டு காண்பித்தவர்களுக்கே நியாய விலைக்கடைகளில் மாதாந்திர மண்ணெண்ணெய் வழங்கப்படும்.

மேலும் சமையல் எரிவாயு ஏஜென்சியினரும் அவர்களது பகுதியில் உள்ள குடும்ப அட்டைதாரர்கள் எரிவாயு சிலிண்டர் விவரத்தினை பதிவு செய்ய வரும் சமயத்தில் குடும்ப அட்டைகளில் வழங்கப்பட்ட சிலிண்டரின் எண்ணிக்கை விவரங்களை பதிவு செய்து கொடுக்கும்படியும் கேட்டுக் கொள்ளப்படுகின்றனர்.

குடும்ப அட்டைதாரர்கள் தங்களது குடும்ப அட்டையில் எரிவாயு இணைப்பு எண்ணிக்கையை வரும் டிசம்பர் 31 ஆம் தேதிக்குள் பதிவு செய்து கொள்ளலாம்.

அவ்வாறு பதிவு செய்யாதவர்களுக்கு வரும் ஜனவரி முதல் தேதி முதல் தகுதியின் அடிப்படையில் மட்டுமே மண்ணெண்ணெய் விநியோகம் செய்யப்படும் எனவும் அச்செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Saturday, November 23, 2013

ஆசிரியர் தேர்வு வாரியத்தில் தேர்ச்சி பெற்றவர்களுக்கு இன்று பதிவு விவரம் சரிபார்த்தல்

ஆசிரியர் தேர்வு வாரியம் நடத்திய இடைநிலை ஆசிரியர் தேர்வில் தேர்ச்சி பெற்ற ராமநாதபுரத்தைச் சேர்ந்தவர்களுக்கு தங்களது பதிவு விவரங்களை சரிபார்க்கும் பணி சனிக்கிழமை (நவ.23) மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகத்தில் நடைபெற இருப்பதாக ஆட்சியர் அலுவலகம் வெள்ளிக்கிழமை வெளியிட்ட செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

 
 

ஆசிரியர் தேர்வு வாரியம் நடத்திய இடைநிலை ஆசிரியர் தேர்வில் தேர்ச்சி பெற்றவர்கள் தங்களது பதிவு விபரம் சரிபார்க்கும் பொருட்டு அனைத்து சான்றுகளுடனும் மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகத்துக்கு சனிக்கிழமை காலை 10 மணி முதல் மாலை 5 மணிக்குள்ளாக நேரில் வருமாறு தெரிவிக்கப்பட்டுள்ளது.

முதன்மைக் கல்வி அலுவலர் ஆர்.சிவகாமசுந்தரி வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் ராமநாதபுரத்தில் (2012) நடைù பற்ற ஆசிரியர் தகுதித் தேர்வில் தேர்ச்சி பெற்ற தேர்வர்களுக்கு தேர்ச்சி பெற்றதற்கான சான்றிதழ்கள் இம்மாதம் 25 ஆம் தேதி முதல் வரும் டிசம்பர் 5 ஆம் தேதி வரை காலை 10 மணி முதல் மாலை 5.45 மணி வரை வழங்கப்படவுள்ளது. எனவே தேர்ச்சி பெற்றவர்கள் உரிய ஆவணங்களுடன் மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர் அலுவலகத்திற்கு நேரில் வந்து சான்றிதழ்களைப் பெற்றுக் கொள்ளுமாறு தெரிவித்துள்ளார்.

Friday, November 22, 2013

மதுரையிலிருந்து துபாய்க்கு நேரடி விமானம்

மதுரையிலிருந்து துபாய்க்கு, வழியில் நிறுத்தம் ஏதும் இல்லாத நேரடி விமானப் போக்குவரத்து சேவையை ஸ்பைஸ் ஜெட் நிறுவனம் இன்று முதல் துவக்குகிறது.



மதுரையில் இருந்து இரவு 11.30 மணிக்கு கிளம்பும் விமானம் நான்கரை மணி நேரத்தில் துபாய் சென்றடையும். துபாயிலிருந்து அதிகாலை ஐந்து மணிக்கு கிளம்பி காலை 9.45 க்கு இந்தியா வந்தடையும்.

மதுரை மற்றும் அதனை சுற்றி உள்ள தென் மாவட்டங்களில் இருந்து துபாயில் பணி புரிபவர்களுக்கும் அவர்கள் குடும்பத்தினருக்கும் இந்த சேவை பயனுள்ளதாக அமையும்.

Friday, November 15, 2013

எஸ்.எம்.எஸ். மணியார்டர் அமல்! 2 நிமிடத்தில் பணம் பெறலாம்!!

தபால் நிலையங்களில் மணி ஆர்டர் அனுப்பினால், எஸ்.எம்.எஸ். மூலம் 2 நிமிடங்களில் பணத்தை பெற்றுக்கொள்ளும் முறை தமிழகத்தில் அமலுக்கு வருகிறது.



தபால் நிலையங்களில் மணி ஆர்டர் மூலம் பணம் அனுப்பினால், அந்த பணம் உரியருக்கு சென்றடைய சில நாட்கள் ஆகிவிடும் நிலை இருந்தது. இதனால் மணி ஆர்டர் மூலம் பணம் அனுப்புவதை பொதுமக்கள் குறைத்துக் கொண்டனர்.

எஸ்.எம்.எஸ். மணியார்டர் அமல்! 2 நிமிடத்தில் பணம் பெறலாம்!! இந்நிலையில் இந்திய தபால்துறை, செல்போன் மணி ஆர்டர் முறையை அறிமுகப்படுத்தி உள்ளது. இதன்படி, பணம் யார் பெயருக்கு அனுப்பப்படுகிறதோ, அவருக்கு தபால் நிலையத்தில் இருந்து ஒரு எஸ்.எம்.எஸ். அனுப்பப்படும்.

பணம் பெறும் நபர், அருகில் உள்ள தபால் நிலையத்திற்கு சென்று, அந்த எஸ்.எம்.எஸ்.ஐ காட்டி பணத்தை பெற்று கொள்ளலாம். ஆயிரம் முதல் 10 ஆயிரம் ரூபாய் வரை இந்த செல்போன் மணி ஆர்டர் மூலம் அனுப்பலாம் எனவும், இந்த எஸ்.எம்.எஸ். மணியாடர் முறை நவம்பர் 16 சனிக்கிழமை முதல்தமிழகத்தில் அமலுக்கு வருகிறது என இந்திய தபால் துறை தெரிவித்துள்ளது.

Friday, October 11, 2013

ஒருவரிடம் இரு அடையாள அட்டை இருந்தால் கடும் நடவடிக்கை

ஒரு நபரிடம் இரு வாக்காளர் அடையாள அட்டை இருப்பது கண்டு பிடிக்கப்பட்டால் அவர் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என வாக்காளர் பட்டியலுக்கான பார்வையாளர் ஜெ.சந்திரகுமார் எச்சரிக்கை விடுத்துள்ளார்.

ராமநாதபுரம் மாவட்ட ஆட்சியர் அலுவலக ஊராட்சி மன்ற கூட்ட அரங்கில் ஆட்சியர் க.நந்தகுமார் தலைமையில் வாக்காளர் பட்டியலில் சுருக்க திருத்தம் தொடர்பான ஆலோசனைக் கூட்டம் புதன்கிழமை நடைபெற்றது .அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சிகளின் பிரதிநிதிகளாக ஜி.முனியசாமி (அதிமுக மாவட்ட செயலாளர்), அகமது தம்பி (திமுக மாவட்ட துணை செயலாளர்), சட்டப்பேரவை உறுப்பினர் ஜவாஹிருல்லா (மனிதநேய மக்கள் கட்சியின் மாநிலத் தலைவர்), ஆ.ரவிச்சந்திர ராமவன்னி(காங்கிரஸ்), திலீப்குமார்(தேமுதிக), அன்பு பகுருதீன்(தேசியவாத காங்கிரஸ்) உள்பட பல்வேறு கட்சி நிர்வாகிகளும் கலந்து கொண்டனர்.



ஆலோசனைக் கூட்டத்தில் வாக்காளர் பட்டியலுக்கான பார்வையாளர் ஜெ.சந்திரகுமார் பேசியது: வரும் 1.1.2014 அன்று தகுதி நாளாக கொண்டு வரைவு வாக்காளர் பட்டியல் வெளியிடப்படுகிறது.

ராமநாதபுரம் மாவட்டத்தில் 9.82லட்சம் வாக்காளர்கள் உள்ளனர். இதில் ஆண் வாக்காளர்கள்.4,94,300.பெண் வாக்காளர்கள் 4,87,645. இவர்களைத் தவிர இதர வாக்காளர்களாக 55 பேரும் உள்ளனர். வாக்காளர் பட்டியலில் பெயரை நீக்கவும்,சேர்க்கவும்,திருத்தம் செய்யும் பணி 1.10.2013முதல் 31.10.2013வரை நடைபெறவுள்ளது. 1.1.2014 அன்று 18 வயது பூர்த்தியடைந்த நபர்கள் வாக்காளர் பட்டியலில் சேர்த்துக் கொள்ளலாம்.

இது தவிர ஏற்கனவே வாக்காளர் பட்டியலில் பெயர் இருந்து இறந்தவர்கள்,வேறு மாவட்டங்களுக்கு சென்றவர்கள் பெயர்களை நீக்கம் செய்தும் கொள்ளலாம். இதற்காக அனைத்து அரசியல் கட்சியினருக்கும் வாக்காளர் வரைவுப் பட்டியல் பிரதிகளாகவும், குறுந்தகடுகளாகவும் வழங்கப்பட்டிருக்கிறது. இதனைக் கொண்டு அந்தந்த அரசியல் கட்சிகள் தங்கள் பகுதிகளில் சேர்க்க- நீக்க வேண்டிய பணிகளை மேற்கொள்ளலாம்.

எந்த ஒரு நபரிடமும் இரு வாக்காளர் அடையாள அட்டை வைத்திருப்பது தெரிய வந்தால் அவர்கள் மீது கிரிமினல் நடவடிக்கை எடுக்கப்படும். வாக்கு மையங்களில் அதிகப்படியான அளவுக்கு பெயர் சேர்த்தல், நீக்கல் படிவங்கள் வைக்கப்பட்டுள்ளன.

ராமநாதபுரம் மாவட்டத்தில் தற்போது அனைத்து வாக்காளர்களுக்கும் வாக்காளர் அடையாள அட்டை வழங்கப்பட்டிருக்கிறது. இம்மாதம் 20,27 ஆகிய நாட்களில் கல்லூரிகளில் பயிலும் மாணவ,மாணவியர் அருகிலுள்ள மையங்களுக்கு சென்று வாக்காளர்களாக சேர்வதற்கு நடவடிக்கை எடுக்கப்படும். மாவட்டத்தில் 701 இடங்களில் 1225 வாக்குச்சாவடிகள் அமைக்கப்பட்டுள்ளன. கடந்த முறை 1050 வாக்குச்சாவடிகள் மட்டுமே அமைக்கப்பட்டிருந்தன. இந்த ஆண்டு கூடுதலாக 175 வாக்குச்சாவடிகள் அமைக்கப்பட்டுள்ளன. இவற்றில் பெண் வாக்குச்சாவடிகளாக மாற்ற வேண்டிய பகுதிகள் குறித்து தகவல் தெரிவித்தால் பரிசீலனை செய்து நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் தெரிவித்தார்.

Friday, October 4, 2013

அரசு போக்குவரத்துக் கழகத்தில் தொழில்பழகுநருக்கு பதிவு மூப்பு பரிந்துரை

தமிழ்நாடு அரசுப் போக்குவரத்துக் கழகம் கும்பகோணம் கோட்டத்திற்கு தொழிற்பழகுநர் பயிற்சிக்கு பதிவு மூப்புள்ளோர் பரிந்துரைக்கப்பட இருப்பதாக ஆட்சியர் அலுவலகம் வியாழக்கிழமை வெளியிட்ட செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.


செய்தி விவரம்: தமிழ்நாடு அரசு போக்குவரத்துக் கழகம் கும்பகோணம் கோட்ட பொதுமேலாளர் கேட்டுக்கொண்டபடி தொழிற்பழகுநர் பயிற்சிப் பணியிடத்திற்கு பதிவு மூப்பு மற்றும் தகுதியுடைய பதிவுதாரர்கள் மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகம் மூலமாக பரிந்துரைக்கப்படவுள்ளனர். 10 ஆம் வகுப்பு தேர்ச்சியுடன் ஐ.டி.ஐ.யில்(கணினி ஆப்பரேட்டர் புரோகிரோமிங் அஸிஸ்டென்ட்) சான்றிதழ் பெற்று பதிவு செய்திருக்க வேண்டும்.1.7.2013 அன்று அனைத்து வகுப்பினருக்கும் வயது 18 முதல் 28 வரை இருக்க வேண்டும். அரசு விதிமுறைகளின்படி வயது வரம்பில் தளர்வு இல்லை. உத்தேச பதிவு மூப்பு அடிப்படையில் பொதுப்போட்டியாளராக இருந்து முன்னுரிமையற்றவர்கள் அனைவரும் பரிந்துரைக்கபடவும் உள்ளனர். இத்தகுதிகளை உடையோர் ராமநாதபுரம் மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகத்திற்கு தங்களது அனைத்து சான்றிதழ்களுடன் இம்மாதம் 7 ஆம் தேதி வருகை புரிந்து பரிந்துரைக்கப்பட்ட விபரத்தினை தெரிந்து கொள்ளுமாறும் அச்செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Thursday, August 1, 2013

கிழக்கு கடற்கரை ரோடு 4 வழியாக மாற்ற ஆய்வு

ராமநாதபுரத்தில் இருந்து கீழக்கரை வழியாக தூத்துக்குடி செல்லும், கிழக்கு கடற்கரை ரோடு(இ.சி.ஆர்.), நான்கு வழிச்சாலையாக மாற்றுவதற்கான ஆய்வு நடந்து வருகிறது.
 
ராமநாதபுரம் ஆர்.எஸ்.மடையில் இருந்து, தூத்துக்குடிக்கு, தற்போது இருவழிச்சாலை பயன்பாட்டில் உள்ளது. இதை நான்கு வழிச்சாலையாக மாற்ற அரசு முடிவு செய்தது. இதை தொடர்ந்து புதுச்சேரி தனியார் கிராபிக்ஸ் நிறுவனத்தின் மேற்பார்வையில், "டோட்டல் ஸ்டேஷன்' கருவி மூலம் "லெவல் டிராயிங்' பணி மேற்கொண்டுள்ளனர்.
 
இது குறித்து திட்ட மேற்பார்வையாளர் ஒருவர் கூறுகையில், ""ராமநாதபுரம்-தூத்துக்குடி கிழக்கு கடற்கரை சாலையில் 120 கி.மீ., தூர ஆய்வு பணிக்கு மூன்று குழுக்கள் அமைக்கப்பட்டு பணி நடந்து வருகிறது. ஒரு மாதத்திற்குள் சர்வே முடிந்து, ஆய்வு அறிக்கையை ஒப்படைத்து விடுவோம். அடுத்த கட்ட பணி குறித்து, நெடுஞ்சாலைத்துறையினர் ஆலோசனை மேற்கொள்வர்,''என்றார்.

Thursday, May 30, 2013

எஸ்எஸ்எல்சி தேர்வு முடிவுகள்: கலக்கிய மாணவிகள்...

தமிழகம் முழுவதும் 10.50 லட்சம் மாணவ மாணவிகள் எழுதிய எஸ்எஸ்எல்சி (10-ம் வகுப்பு) தேர்வு முடிவுகள் இன்று காலை வெளியானது. ஈரோடு மாவட்டம் பெருந்துறையைச் சேர்ந்த கொங்கு வேளாளர் பள்ளி மாணவி அனுஷா 498 மதிப்பெண்கள் பெற்று முதலிடம் பெற்றுள்ளார். இதேபோல மேலும் 8 மாணவிகள் 498 மதிப்பெண்கள் பெற்றுள்ளனர். முதலிடம் பெற்ற 9 பேருமே மாணவிகள் என்பது குறிப்பிடத்தக்கது. மாணவி 500-க்கு 497 மதிப்பெண்கள் பெற்று மொத்தம் 52 மாணவ மாணவிகள் மாநிலத்தில் இரண்டாம் இடம் பெற்றுள்ளனர். 496 மதிப்பெண்கள் பெற்று 137 மாணவர்கள் மூன்றாம் இடம் பிடித்துள்ளனர்.



இணைய தளங்கள்...

தேர்வு முடிவுகளை கீழ்க்காணும் இணையதள முகவரிகளில் மாணவ-மாணவிகள் தெரிந்துகொள்ளலாம்.

www.tnresults.nic.in
www.dge1.tn.nic.in
www.dge2.tn.nic.in
 www.dge3.tn.nic.in

இலவசமாக... 

பிளஸ்-2 தேர்வு முடிவை ஒவ்வொரு மாவட்டத்திலும் கலெக்டர் அலுவலகத்தில் உள்ள தேசிய தகவலியல் மையத்திலும் (நிக் சென்டர்), அனைத்து மாவட்ட மைய நூலகங்களிலும், கிளை நூலகங்களிலும் மாணவ-மாணவிகள் இலவசமாக தெரிந்துகொள்ள தேர்வுத்துறை ஏற்பாடு செய்யப்பட்டது. அதேபோல, எஸ்.எஸ்.எல்.சி. தேர்வு முடிவையும் எவ்வித கட்டணமும் இல்லாமல் இலவசமாக தெரிந்துகொள்ள ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

மதிப்பெண் பட்டியல்:

மாணவர்களுக்கு மதிப்பெண் பட்டியல் ஜூன் 20ம் தேதி வழங்கப்படும் என தேர்வுத்துறை அறிவித்துள்ளது. பள்ளி மாணவர்கள் சம்பந்தப்பட்ட பள்ளி தலைமை ஆசிரியர்களிடமும், தனி ‌தேர்வர்கள் தேர்வெழுதிய மையங்கள் மூலமாகவும் மதிப்பெண் பட்டியலை பெற்றுக் கொள்ளலாம்.

Thursday, May 23, 2013

2013-ம் ஆண்டிற்கான ஆசிரியர் தகுதித் தேர்வு அறிவிப்பு

2013-ஆம் ஆண்டுக்கான தமிழ்நாடு ஆசிரியர் தகுதித் தேர்வு குறித்த அறிவிப்பு இன்று வெளியிடப்பட்டுள்ளது.


இதன்படி வரும் ஜூன் 17-ஆம் தேதி விண்ணப்ப விநியோகம் தொடங்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது. பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்களை சமர்ப்பிக்க கடைசி நாள் ஜூலை 1-ம் தேதி. அன்றைய தேதியில் மாலை 5.30 மணி வரை விண்ணப்பங்களை அளிக்கலாம்.

தகுதித் தேர்வின் முதல் தாள் தேர்வு ஆகஸ்ட் 17-ஆம் தேதி நடைபெறுகிறது. இரண்டாம் தாள் தேர்வு ஆகஸ்ட் 18-ஆம் தேதி நடத்தப்பட இருக்கிறது. இரண்டு தேர்வுகளும் காலை 10 மணி முதல் பிற்பகல் ஒரு மணி வரை நடைபெறும். அனைத்து அரசு மேல்நிலைப்பள்ளிகளின் தலைமை ஆசிரியர்களிடம் தகுதித் தேர்வுக்கான விண்ணப்பங்களை பெறலாம்.

தகுதித் தேர்வு முதல் தாள் மற்றும் இரண்டு தாள் ஆகிய இரண்டையும் எழுதுபவர்கள் தனித்தனியாக விண்ணப்பிக்க வேண்டும். பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்களை அந்தந்த மாவட்ட கல்வி அதிகாரி அலுவலகத்தில் விண்ணப்பத்தாரர் நேரடியாக ஒப்படைக்க வேண்டும். தபால் மூலமாகவோ, ஆன்லைன் மூலமாகவோ அல்லது ஆசிரியர் தேர்வு வாரிய அலுவலகத்திற்கோ பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்களை அனுப்பக்கூடாது.

ஆசிரியர் தகுதித் தேர்வுக்கான விண்ணப்ப கட்டணம் 50 ரூபாய். தேர்வுக்கட்டணம் பொதுப்பிரிவினருக்கு 500 ரூபாய். எஸ்.சி.எஸ்.டி மற்றும் மாற்றுத் திறனாளிகளுக்கு 250 ரூபாய்.

Sunday, April 21, 2013

ராமநாதபுரத்தில் ஏப்.28 இலவச இதய அறுவைச் சிகிச்சை முகாம்

ராமநாதபுரம் செய்யது அம்மாள் மேல்நிலைப் பள்ளியில் ஏப்.28 ஆம்  தேதி இதய அறுவைச் சிகிச்சை முகாமை இலவசமாக நடத்த ரோட்டரி சங்கம்  ஏற்பாடு செய்து வருவதாக அச்சங்கத்தின் துணை ஆளுநர் சின்னத்துரை அப்துல்லா தெரிவித்தார்.

இது குறித்து அவர் சனிக்கிழமை கூறியது:
ராமநாதபுரம் ரோட்டரி சங்கம், சென்னை அப்பல்லோ குழந்தைகள் மருத்துவமனை  ஆகியவை இணைந்து செய்யது அம்மாள் மேல்நிலைப் பள்ளி வளாகத்தில் ஏப்.28 ஆம் தேதி காலை 9 மணி முதல் பிற்பகல் 2 மணி வரை இதய அறுவைச் சிகிச்சை முகாமை இலவசமாக நடத்த உள்ளன.

ரோட்டரி சங்க ஆளுநர் ஹெச். ஷாஜகான் முயற்சியில் நடைபெறும் இம்முகாமில்  16 வயதுக்குட்பட்ட அனைத்து குழந்தைகளும் பங்கேற்கலாம். இதில் இதய நோய் சம்பந்தப்பட்டவை கண்டறிந்து தேவைப்பட்டால் இலவச அறுவைச் சிகிச்சை அளிக்கப்படவுள்ளது.

இதய அறுவைச் சிகிச்சை மருத்துவர்களால் பரிந்துரைக்கப்பட்டு வசதியில்லாமல் அறுவைச் சிகிச்சை செய்யாமல் இருந்தாலும்  இம்முகாமில் கலந்து கொண்டு பயன் பெறலாம்.

ஏழைக் குழந்தைகளுக்கு அதிக முக்கியத்துவம் அளிக்கப்படும். மேலும் விவரங்களுக்கு துணை ஆளுநர் சின்னத்துரை அப்துல்லா, செல்பேசி எண்: 98424-21334 அல்லது ரோட்டரி சங்கத் தலைவர் ஜெ. ரமேஷ் பாபு, செல்பேசி: 94425-21964 என்ற எண்ணில் தெரிந்து கொள்ளலாம் எனத் தெரிவித்தார்.

Friday, April 12, 2013

முகம்மது சதக் கல்லூரியில் ரத்த தான முகாம்

முகம்மது சதக் பொறியியல் கல்லூரி நாட்டு நலப்பணித் திட்டம்,  அரசு மருத்துவமனை மற்றும் மீனாட்சிமிஷன் ஆராய்ச்சி நிறுவனம் ஆகிய அமைப்புகள்  இணைந்து ரத்த தான முகாமை கல்லூரி வளாகத்தில் நடத்தின.


முகாமுக்கு கல்லூரி முதல்வர் முஹம்மது ஜஹாபர் தலைமை வகித்தார். இயக்குநர்  ஹபீப்முகம்மது சதக்கத்துல்லா முன்னிலை வகித்தார். திட்ட அலுவலர் சிவபாலன்  வரவேற்றார். இதில் மீனாட்சிமிஷன் மருத்துவமனை மருத்துவர் ரவி தலைமையில்,  குழுவினர் கலந்துகொண்டு ரத்தம் சேகரித்தனர்.

முகாமில் 350-க்கும் மேற்பட்ட மாணவ,மாணவியர் ரத்த தானம் செய்தனர்.
 திட்ட அலுவலர் முத்துவேல் நன்றி கூறினார். பேராசிரியர்கள்  கார்த்திகேயன், முகம்மதுரபி, ஷேக் யூசுப் ஆகியோர் கலந்து கொண்டனர்.

Wednesday, March 27, 2013

10ஆம் வகுப்பு தேர்வு தொடங்கியது

இன்று முதல் 10ஆம் வகுப்பு தேர்வு தொடங்கி உள்ளது. மாணவ மாணவியர்களுக்கு மாயாகுளம் செய்திகள் சார்பாக வாழ்த்துகளை தெரிவித்து கொள்கிறேன். இத்துடன் தேர்வு அட்டவணையையும் தேர்வின் நேரத்தையும் இணைகிறேன்.

Time Table For exams

March 27, 2013 – Wednesday – Language I (Tamil I)
March 28, 2013 – Thursday    - Language II (Tamil Paper II)
April 1, 2013      - Monday      - English  I
April 2, 2013      - Tuesday      - English – II
April 5, 2013     – Friday          - Maths
April 8, 2013     – Monday       – Science
April 12, 2013   – Friday          - Social Science


Timings for all exams have a pattern as below:
10am       -10.10 am       – Reading Question Paper
10.10 am  - 10.15 am      - Filling up particulars in Answer Sheet
10.15 am – 12. 45 pm     – Exam duration (2.5 hours)

Tuesday, March 26, 2013

கீழக்கரையில் 3.75 கிலோ கஞ்சா பறிமுதல்: பெண் உள்பட 3 பேர் கைது

கீழக்கரையில் 3.75 கிலோ கஞ்சா பறிமுதல் செய்யப்பட்டது. இது தொடர்பாக பெண் உள்பட 3 பேர் கைது செய்யப்பட்டனர்.

கீழக்கரை ஜின்னா தெருவைச் சேர்ந்தவர் நல்லஇபுராஹீம் (55). இவர் சங்குவெட்டி தெரு கடற்கரைப் பகுதியில் கஞ்சா விற்பதாகப் போலீஸாருக்கு ரகசியத் தகவல் கிடைத்தது.


இதன்பேரில் அப்பகுதிக்கு சென்ற போலீஸார் நல்ல இபுராஹீமிடம் இருந்து 1.25 கிலோ கஞ்சாவைப் பறிமுதல் செய்தனர்.

மேலும் அவரிடம் நடத்திய விசாரணையில், உத்திரகோசமங்கை எக்ககுடி பகுதியைச் சேர்ந்த அப்துல் கபூர் மனைவி ரஹ்மத்நிசா (45), இவரது மருமகன் கமருதீன் (26) ஆகியோரிடமிருந்து கஞ்சா வாங்கியதாகக் கூறினார்.

உடனே போலீஸார் கீழக்கரை புதிய பேருந்து நிலையம் அருகே நின்றிருந்த ரஹ்மத்நிசா, கமருதீன் ஆகியோரைப் பிடித்து விசாரணை செய்தனர்.
அவர்கள் வைத்திருந்த தலா 1.25 கிலோ கஞ்சாவைப் பறிமுதல் செய்தனர்.
இது தொடர்பாக கீழக்கரை போலீஸார் வழக்குப் பதிவு செய்து 3 பேரை கைது செய்ததுடன், 3.75 கிலோ கஞ்சாவையும் பறிமுதல் செய்தனர்.

Tuesday, March 12, 2013

ஏர்வாடியில் கடல் நீரை குடிநீராக்கும் திட்டம் தொடக்கம்


ராமநாதபுரம் மாவட்டம், ஏர்வாடியில் கடல் நீரை குடிநீராக்கும் திட்டம் தொடக்க விழா திங்கள்கிழமை நடைபெற்றது.

ராமநாதபுரம் மாவட்ட ஆட்சியர் நந்தகுமார் தலைமை வகித்தார். முதுகுளத்தூர் சட்டப்பேரவைத் தொகுதி உறுப்பினர் முருகன், கடலாடி ஊராட்சி ஒன்றியத் தலைவர் மூக்கையா ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

இந்திய அறிவியல் தொழில்நுட்பத் துறை செயலர் ராமசாமி, உப்பு வேதியியல் துறை இயக்குநர் போஸ், முதன்மை விஞ்ஞானி ஈஸ்வரன் ஆகியோர் கடல் நீரைக் குடிநீராக்கும் திட்டத்தை தொடக்கி வைத்தனர்.

முன்னதாக, ஏர்வாடி தர்கா ஹக்தார் சபைத் தலைவர் அம்ஜத் ஹுசைன் வரவேற்றார். நிகழ்ச்சியில் மாவட்ட ஆட்சியர் நந்தகுமார் பேசியதாவது:

ராமநாதபுரம் மாவட்ட கடலோரப் பகுதிகளில் குடிநீர்ப் பற்றாக்குறை சற்று அதிகமாகவே உள்ளது. இக் குறையைப் போக்குவதற்காக மத்திய அரசின் சி.எஸ்.எம்.சி.ஆர்.ஐ. நிறுவனம் மூலமாக சில இடங்களில் இத் திட்டங்கள் செயல்படுத்தப்பட்டு வருகின்றன. தற்போது ஏர்வாடியில் தொடக்கப்பட்டுள்ளது.

         


முள்ளிமுனை, காரங்காடு ஆகிய இடங்களிலும், நரிப்பையூரிலும் மத்திய அரசு மற்றும் தனியார் கூட்டு ஒத்துழைப்புடன் சூரிய ஒளி மூலமாக கடல் நீரைக் குடிநீராக்கும் திட்டம் கடந்த மாதம் முதல் செயல்படுத்தப்பட்டு வருகிறது.

இதுபோன்று மாவட்டத்தில் ஏற்கெனவே தொடங்கப்பட்டு தற்போது செயல்படாமல் உள்ள திட்டங்கள் படிப்படியாகச் செயல்பாட்டுக்கு கொண்டு வரப்படும்.

ராமநாதபுரம் மாவட்டத்துக்கு மொத்தம் 78 லட்சம் லிட்டர் தண்ணீர் தேவைப் படுகிறது. இங்கு தற்போது 1 லட்சம் லிட்டர் தண்ணீர் உற்பத்தி செய்யப்படுகிறது. எனவே, பொதுமக்கள் தண்ணீரை முறையாகவும், சிக்கனமாகவும் பயன்படுத்த வேண்டும் என்றார்.

நிகழ்ச்சியில், வட்டார வளர்ச்சி அலுவலர்கள் தங்கராஜ், குருநாதன், ஏர்வாடி ஊராட்சி துணைத் தலைவர் ரகுமத்துல்லாகான், ஒன்றியக் கவுன்சிலர்கள் காதர் பாட்சா, செüந்திரபாண்டி, மன்ற உறுப்பினர்கள் சைனாபேகம், அம்ஜத்உசேன், பத்ரிஸ்கான், ராசு, குமார், சித்ரத்பானு, தில்லைராணி, சுல்தான் செய்யது இபுராகிம், ஷாஜஹான், மாரியம்மாள், செல்வராஜ், சசிகலா, குமார், சுதாகர் மற்றும் ஏராளமான பொதுமக்கள் கலந்து கொண்டனர்.

ஏர்வாடி ஊராட்சி மன்றத் தலைவர் முஹம்மது அலி ஜின்னா நன்றி கூறினார்.

Friday, March 1, 2013

மாயாகுளம் அருகே ம‌ய‌ங்கி விழுந்த‌ அபூர்வ‌ க‌ழுகு!

மாயாகுளம்  அருகே பார‌தி ந‌க‌ர் பகுதியில் அபூர்வமான பாம்பு தின்னி கழுகு ஒன்று மயங்கிய நிலையில் காணப்பட்டது.

கீழக்கரையைச் சேர்ந்த ஆட்டோ ஓட்டுநர் முரளி பாரதி நகர் பகுதியில் ஆட்டோ ஒட்டிச் சென்ற போது, சாலையில் அபூர்வ பறவை ஒன்று மயங்கி விழுவதை கண்டார். அப்பறவையை எடுத்து சென்று கீழக்கரை காவல் நிலையத்தில் ஒப்படைத்தார்.

இக்கழுகு 1.5கிலோ எடையும், 3அடி நீளம் இறகுகளைக் கொண்டதாகும். இது இப்பகுதியில் அரியவகை பறவை.

அப்ப‌ற‌வை பாம்பு தின்னி க‌ழுகு என‌ உறுதி செய்து கால்ந‌டை ம‌ருத்துவ‌ம‌னைக்கு எடுத்து சென்ற‌ன‌ர்.கால்ந‌டை ம‌ருத்துவ‌ர் ப‌ரிசோத‌னை செய்த‌தில் க‌ழிச்ச‌ல் நோய் தாக்கியுள்ள‌து தெரிய‌ வ‌ந்த‌து.ம‌ருத்துவ‌ர்க‌ள் சிகிச்சை அளித்த‌ன‌ர்.

இது குறித்து வ‌ன‌ச்ச‌ர‌க‌ர் ஜெய‌ராம‌ன் கூறியதாவ‌து,விஷ‌ப்பூச்சிக‌ளையே உண‌வாக‌ சாப்பிடும்  இக்க‌ழுகு இப்ப‌குதியில் அரிதாகும் .இப்ப‌குதியை க‌ட‌ந்து போகும் போது க‌ழிச‌ல் நோயால் பாதிக்க‌ப்ப‌ட்டிருந்த‌தால் ம‌ய‌ங்கி கீழே விழுந்துள்ள‌து.மேலும் இது குஞ்சு க‌ழுகு இது ஒரு அடிக்கு மேல் வ‌ள‌ரும்.என்றார்.

Friday, February 8, 2013

கீழக்கரை - கடையில் திருட்டு

கீழக்கரையில் எல்.ஐ.சி. முகவர் கடையில் ரூ. 20 ஆயிரம் ரொக்கம் மற்றும் 5 செல்போன்கள் திருடப்பட்டதாக புகார் செய்யப்பட்டுள்ளது.

கீழக்கரை மேலத்தெரு 500 பிளேட் பகுதியைச் சேர்ந்த சேக்முகைதீன் மகன் ராஜாகனி(57). எல்ஐசி முகவராக உள்ளார். இவரது கடை சின்னக்கடைதெரு பகுதியில் உள்ளது.

வியாழக்கிழமை இரவில், இவரது கடையின் பூட்டு உடைக்கப்பட்டு உள்ளே இருந்த ரொக்கம் ரூ.20ஆயிரம் மற்றும் 5செல்போன்கள் திருடப்பட்டிருந்ததாம்.

வெள்ளிக்கிழமை காலை கடைக்கு வந்த ராஜாகனி கடையில் பணம், செல்போன்கள் திருடப்பட்டிருப்பதை அறிந்து காவல் நிலையத்தில் புகார் செய்தார்.

போலீஸார் மோப்பநாயுடன் வந்து சோதனை நடத்தினர். இச்சம்பவம் குறித்து வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Thursday, February 7, 2013

வங்கி, ஆசிரியர் தகுதித் தேர்வுக்கு இலவச பயிற்சி வகுப்பு

ராமநாதபுரத்தில் இம்மாதம் 10 ஆம் தேதி ஞாயிற்றுக்கிழமை முதல் மதுரை எய்ம் நிறுவனத்தினரால் ஆசிரியர் தகுதித் தேர்வு மற்றும் வங்கி தேர்வுகளுக்கான இலவச ஆலோசனை மற்றும் பயிற்சி வகுப்புகள் நடைபெற இருப்பதாக அந்நிறுவனத்தின் நிர்வாகி என்.ஜெயக்குமார் வியாழக்கிழமை தெரிவித்தார்.

ராமநாதபுரம் சிங்காரத்தோப்பு இன்பேன்ட் ஜீசஸ் மெட்ரிக் பள்ளியில் வரும் ஞாயிற்றுக்கிழமை காலை 10 மணி முதல் மாலை 4 மணி வரை மதுரை எய்ம் நிறுவனத்தினரால் ஆசிரியர் தகுதித்தேர்வு மற்றும் வங்கி தேர்வுகளுக்கு இலவச ஆலோசனை மற்றும் பயிற்சி வகுப்புகள் நடத்தப்படும். தேர்வு எழுத விருப்பம் உள்ளவர்கள் இந்த வாய்ப்பை பயன்படுத்திக் கொள்ளுமாறும் மேலும் விபரங்களுக்கு 9486360716 என்ற எண்ணில் தொடர்பு கொள்ளுமாறும் அவர் தெரிவித்துள்ளார்.

Wednesday, January 30, 2013

விஸ்வரூபம்: ராமநாதபுரம் திரையரங்கில் பெட்ரோல் குண்டு வீச்சு

ராமநாதபுரத்தில் விஸ்வரூபம் திரையிட இருந்த திரையரங்கிலும், அருகில் இருந்த மற்றொரு திரையரங்கிலும் முகமூடி அணிந்த 15 பேர் கொண்ட கும்பல் புதன்கிழமை, போலீஸ் பாதுகாப்பையும் மீறி பெட்ரோல் குண்டுகளை வீசினர். இதில் திரையரங்கின் முன்புறக் கண்ணாடிகள் உடைந்து சேதமாயின.
 ராமநாதபுரம் நகரில் புதிய பஸ் நிலையம் அருகே தி சினிமா என்ற திரையரங்கில் விஸ்வரூபம் திரைப்படம் திரையிடப்படுவதாக இருந்தது. திரையரங்க உரிமையாளர்கள் சங்கம் எடுக்கும் முடிவுகளின்படி விஸ்வருபம் படத்தை வெளியிடுவோம் என முடிவு செய்திருந்ததால், படம் வெளியாவதை தாற்காலிகமாக நிறுத்தி வைத்திருந்தனர். அதற்குப் பதிலாக வேறு திரைப்படம் திரையிடப்பட்டது.

இந்த நிலையில், திரையரங்கில் ராமநாதபுரம் டி.எஸ்.பி. முரளீதரன் தலைமையில் 50-க்கும் மேற்பட்ட போலீஸôர் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டிருந்தனர். அப்போது  சுமார் 15 பேர் கொண்ட கும்பல், முகத்தை கைக்குட்டையால் மூடிக் கொண்டு திரையரங்கின் மீது கற்களையும், சோடா பாட்டில்களையும் வீசினார்களாம். இதில் திரையரங்கின் முன்புறக் கண்ணாடிகள் உடைந்தன.

இதற்கு அருகில் இருந்த ஜெகன் திரையரங்கின் மீதும் பெட்ரோல் குண்டுகளை வீசியுள்ளனர். அந்த குண்டு திரையங்கின் உள்ளே முன்புற வளாகத்தில் விழுந்துள்ளது. வீசப்பட்ட பாட்டில்கள் உடைந்து, பல இடங்களில் சிதறிக் கிடந்தன. பெட்ரோல் குண்டு வீசியவர்கள், பாதுகாப்புப் பணியில் இருந்த கேணிக்கரை காவல் நிலையக் காவலர் சந்திரன் என்பவரையும் கீழே தள்ளிவிட்டு குண்டுகளை வீசியுள்ளனர்.

இச்சம்பவம் குறித்து திரையரங்க உரிமையாளர்கள் ஜெ. தினேஷ்பாபு மற்றும் ஜெ.சுகுமார் ஆகிய இருவரும் கேணிக்கரை காவல் நிலையத்தில் இன்ஸ்பெக்டர் கிருஷ்ணமூர்த்தியிடம் புகார் செய்தனர். புகாரின் பேரில், போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை செய்து வருகின்றனர்.

சம்பவ இடத்தில் ராமநாதபுரம் எஸ்.பி. மயில்வாகனன் கூறியதாவது: போலீஸ் பாதுகாப்பையும் மீறி சம்பவம் நடந்துள்ளது. சுமார் 10 பேர் கொண்ட கும்பல் முகத்தில் கைக்குட்டையை கட்டிக்கொண்டு வந்து கற்கள், சோடா பாட்டில்களை வீசியுள்ளனர். இதில் திரையரங்கத்தின் முன்புறக் கண்ணாடிகள் சேதமடைந்துள்ளன.

பாட்டிலுக்குள் பெட்ரோல் இருந்ததா அல்லது மண்ணெண்ணெய் இருந்ததா என்றும் ஆய்வு செய்து வருகிறோம். காவலர் சந்திரன் என்பவரையும் வந்த கும்பல் தள்ளி விட்டுள்ளது. கற்கள், சோடா பாட்டில்கள் வீசியது மற்றும் பெட்ரோல் குண்டு வீசியது, காவலரை பணி செய்யவிடாமல் தள்ளி விட்டது உள்ளிட்ட பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிவு செய்யப்படும். குற்றவாளிகளைப் பிடிக்கவும் தீவிர நடவடிக்கை எடுக்கப்படும் எனத் தெரிவித்தார்.

அரசு பள்ளி மாணவர்களுக்கு பாராட்டுச் சான்றிதழ்: ஆட்சியர்

ராமநாதபுரம் மாவட்டத்தில் 10 மற்றும் 12 ஆம் வகுப்பு பொதுத்தேர்வில் அதிக மதிப்பெண்கள் பெறும் அரசு பள்ளி மாணவ, மாணவியருக்குப் பாராட்டுச் சான்றிதழ் வழங்கப்படும் என ஆட்சியர் க.நந்தகுமார் தெரிவித்துள்ளார்.

  இது குறித்து அவர் செவ்வாய்க்கிழமை கூறியது:

  அரசுப் பள்ளிகளில் பயிலும் மாணவ, மாணவியர் அரசுத் தேர்வில் நல்ல மதிப்பெண்கள் பெற்று மாவட்ட நிர்வாகத்திற்கும், ஆசிரியர்களுக்கும், பெற்றோர்களுக்கும் நல்ல பெயரைத் தேடித் தர வேண்டும்.

  அரசு பொதுத் தேர்வில் 10 ஆம் வகுப்பில் 500-க்கு 475-க்கும் அதிகமான மதிப்பெண்களும், 12 ஆம் வகுப்பில் 1200-க்கு 1175 மதிப்பெண்களும் பெறும்  மாணவ, மாணவியருக்கு சுதந்திர தின நன்னாளில் பாராட்டுச் சான்றிதழ்கள், பரிசுகள் வழங்கப்படும் என ஆட்சியர் க.நந்தகுமார் தெரிவித்தார்.

இராமநாதபுரம் மாவட்டத்தில் 51 இடங்களில் நேரடி நெல் கொள்முதல் நிலையங்கள் திறப்பு

ராமநாதபுரம் மாவட்டத்தில் நடப்பு பருவத்தில் அறுவடையாகக்கூடிய  நெல்லினை விவசாயிகளிடமிருந்து கொள்முதல் செய்வதற்கு ஏதுவாக 51 இடங்களில் நேரடி நெல் கொள்முதல் நிலையங்கள் திறக்கப்பட்டிருப்பதாக மாவட்ட ஆட்சியர் க.நந்தகுமார் செவ்வாய்க்கிழமை தெரிவித்துள்ளார்.

  இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு:

  ராமநாதபுரம் வட்டாரத்தில் மாதவனூர், புல்லங்குடி, தொருவளூர், காட்டூரணி, வெண்ணாத்தூர். திருப்புல்லாணி வட்டாரத்தில் மல்லல், வைகை, பரமக்குடி  வட்டாரத்தில் வெங்கிட்டான்குறிச்சி, பார்த்திபனூர். முதுகுளத்தூர் வட்டாரத்தில் கீரனூர், முதுகுளத்தூர், நல்லூர், செல்வநாயகபுரம், திருவரங்கம், காக்கூர், செம்பொன்குடி, தேரிருவேலி, விளங்களத்தூர்.

  கமுதி வட்டாரத்தில் முஷ்டக்குறிச்சி, என்.கரிசல்குளம், கீழராமநதி, புத்துருத்தி, பெருநாழி, மண்டலமாணிக்கம், டி.புனவாசல், பேரையூர், பம்மனேந்தல், கோவிலாங்குளம், காவடிப்பட்டி, கமுதி, ஏ.தரைக்குடி, பாக்குவெட்டி, கே.வேம்பக்குளம், ஆணையூர், ராமசாமிப்பட்டி, நகரத்தார் குறிச்சி, கே.பாப்பாகுளம். கடலாடி வட்டாரத்தில் ஓரிவயல், டி.எம்.கோட்டை, ஏ.புனவாசல், கடலாடி, ஆப்பனூர், சாயல்குடி, மேலச்செல்வனூர், சிக்கல், மேலக்கிடாரம்.

  போகலூர் வட்டாரத்தில் எஸ்.கொடிக்குளம், சமேனூர். நயினார்கோயில் வட்டாரத்தில் வல்லம், மேமங்கலம், வாதவனேரி உள்ளிட்ட 51 இடங்களில் தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக் கழகத்தினரால் நேரடி நெல் கொள்முதல் நிலையங்கள் திறக்கப்பட்டுள்ளன.

  விவசாயிகள் தங்கள் விளை நெல்லைக் நேரடி நெல் கொள்முதல் நிலையங்களில் விற்பனை செய்து உரிய லாபம் பெறுமாறு ஆட்சியர் தெரிவித்துள்ளார்.

Tuesday, January 22, 2013

இராமநாதபுரம் ஜேம்ஸ் அன் கோ (வில்) வேலை வாய்ப்பு


இளம் விஞ்ஞானிகளை உருவாக்கப் பயிற்சி முகாம்

ராமநாதபுரம் மாவட்டம், மண்டபத்தில் இளம் விஞ்ஞானிகளை உருவாக்கும் பயிற்சி முகாம் திங்கள்கிழமை தொடங்கியது.

மதுரை யாதவா கல்லூரி, ராமநாதபுரம் மாவட்டம் மண்டபத்தில் உள்ள மத்திய  கடல் வள மீன் ஆராய்ச்சி நிலையம் ஆகியவை இணைந்து இளம் விஞ்ஞானிகளை  உருவாக்கும் பயிற்சி முகாம் நடத்த முடிவு செய்தனர். இதன்படி மண்டபம் கடல்வள மீன் ஆராய்ச்சி நிலையத்தில் பயிற்சி முகாம் துவக்க விழா திங்கள்கிழமை நடைபெற்றது.



யாதவா கல்லூரியின் திட்ட ஒருங்கிணைப்பாளர் பி.எஸ்.நவராஜ் தலைமை வகித்தார். பயிற்சி முகாமை மீன் ஆராய்ச்சி நிலைய விஞ்ஞானி ஜி.கோபகுமார் துவக்கி வைத்துப் பேசினார்.

இதில் இன்டெல் ஆராய்ச்சி தொழில்நுட்ப சேவை அமைப்பின் பெங்களூரைச் சேர்ந்த விஞ்ஞானி ஹன்னா முருகன், யாதவா கல்லூரியின் மற்றொரு திட்ட ஒருங்கிணைப்பாளர் என்.யசோத்குமார் ஆகியோர் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

யாதவா கல்லூரியின் திட்ட ஒருங்கிணைப்பாளர் பி.எஸ்.நவராஜ் பேசியது:
மேல்நிலைப் பள்ளிகளில் பிளஸ் 1 படிக்கும் மாணவ, மாணவிகளில் அதிக மதிப்பெண் எடுத்தவர்களைத் தேர்வு செய்து அவர்களை இளம் விஞ்ஞானிகளாக உருவாக்குவதற்கான பயிற்சி ஜன.21 இல் தொடங்கி 30 ஆம் தேதி வரை நடைபெறுகிறது.

பத்து ஆண்டுகளாகத் தொடர்ந்து இப்பணியை செய்து வருகிறோம். பயிற்சி முகாமில் 15 பள்ளிகளைச் சேர்ந்த 75 பேர் பங்கேற்கின்றனர்.

இதில் நானோ சென்சார் மற்றும் ரோபாட், வானவியல் மற்றும் கணித ஆராய்ச்சிகள், ஜின் தொழில்நுட்பம், புற்று நோய், சூரிய சக்தி, உயிர் சக்தி, தண்ணீர் சேமிப்பு மற்றும் இயற்கைப் பாதிப்பு, மேஜிக் மூலம் அறிவியலை பரப்புதல், ஜீன் மாற்றமடைந்த தாவரம் ஆகியவை குறித்து அந்தந்தத் துறைகளில் தலை சிறந்த விஞ்ஞானிகள் மூலம் மாணவர்களுக்குப் பயிற்சி அளிக்கப்படும்.

இதன் மூலம் இளம் வயதிலேயே விஞ்ஞானிகளாக மாற்ற முடியும் என்பதற்கான பயிற்சியே இதுவாகும் என்றார்.

மாவட்டத்தில் 1 லட்சம் மரக்கன்று நடும் பணி தொடக்கம்

ராமநாதபுரம் மாவட்டத்தில் பசுமைக் கலாம் இயக்கம், கீழக்கரை முகம்மது சதக் அறக்கட்டளை ஆகியவை இணைந்து ஒரு லட்சம் மரக்கன்றுகளை  நடும் பணியை திங்கள்கிழமை துவக்கின.


  இதையொட்டி ராமநாதபுரம் சரக டி.ஐ.ஜி. முகாம் அலுவலகம் அருகே பசுமைக் கலாம் இயக்கத்தின் நிறுவனரும், நடிகருமான விவேக் ஒரு மரக்கன்றினை நட்டார். அதற்கு கலாம் என்று பெயரிட்டு 1 லட்சம் மரக்கன்றுகள் நடும் பணியை துவக்கி வைத்தார். பின்னர் அவர் கூறியது:

  பசுமைக் கலாம் இயக்கம் சார்பில் இதுவரை 18 லட்சம் மரக்கன்றுகள் நடப்பட்டுள்ளன. 25 லட்சம் மரக்கன்றுகள் நடும் பணி பூர்த்தியடையும்போது முன்னாள் குடியரசுத் தலைவர் அப்துல்கலாமை அழைத்து ஒரு மிகப்பெரிய விழாவை நடத்த முடிவு செய்துள்ளோம்.

  ராமநாதபுரம் மாவட்டம் வறட்சியாகக் காட்சியளிக்கின்றன. மழை பெய்வதற்கு மிகவும் முக்கியம் மரங்களாகும். அதனால்  அப்துல் கலாமின் கனவான மரக்கன்றுகள் நடும் பணியை பசுமைக் கலாம் இயக்கம்  மூலம் செய்து வருகிறோம்.

  பள்ளி மாணவ, மாணவிகளுக்கும், இளைஞர்களுக்கும் எழுச்சி தீபமாக இருந்து வரும் அப்துல்கலாமின் பெயரையை இன்று நட்டு வைத்த மரக்கன்றுக்கு சூட்டியுள்ளோம் என்றார்.

  இதில் ராமநாதபுரம் மாவட்ட ஆட்சியர் க.நந்தகுமார் பேசுகையில், இன்று ஒரே நாளில் அனைத்து அரசுப்பள்ளிகளிலும் மொத்தம் 50 ஆயிரம் மரக்கன்றுகளை நட முடிவு செய்துள்ளோம்.

 மேலும் 50 ஆயிரம் மரக்கன்றுகளை மாவட்டம் முழுவதும்  நடுவது உள்பட மொத்தம் ஒரு லட்சம் மரக்கன்றுகள் மாவட்டம் முழுவதும்  நடுவதற்கான ஏற்பாடுகளை செய்து வருவதாகத் தெரிவித்தார்.

  விழாவில் டி.ஐ.ஜி. எம்.ராமசுப்பிரமணி, மாவட்டக் காவல் கண்காணிப்பாளர் மயில்வாகனன், முகம்மது சதக் அறக்கட்டளையின் தலைவர் ஹமீது அப்துல்காதர், மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர் சிவகாம சுந்தரி, வட்டாட்சியர் க.அன்புநாதன், முதன்மைக் கல்வி அலுவலரின் நேர்முக உதவியாளர் ஜேக்கப் ஆகியோர் உள்பட பலர்  கலந்து கொண்டனர்.

  பின்னர் அப்துல் கலாம் படித்த சுவார்ட்ஸ் மேல்நிலைப் பள்ளியிலும் மரக்கன்றுகளை விவேக் நட்டார்.

Monday, January 21, 2013

பிப்ரவரி 1 முதல் 18 வரை பிளஸ் 2 செய்முறைத் தேர்வு

பிளஸ் 2 செய்முறைத் தேர்வுகளை பிப்ரவரி 1 முதல் 18 வரை நடத்த வேண்டும் என்று அரசுத் தேர்வுகள் இயக்ககம் மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர்களுக்கு உத்தரவிட்டுள்ளது.


இந்தத் தேர்வுக்கான அட்டவணையை அந்தந்த மாவட்டத்திலுள்ள பள்ளிகளின் எண்ணிக்கைக்கு ஏற்ப சம்பந்தப்பட்ட மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர்களே தயாரிக்க வேண்டும் என்றும் உத்தரவிடப்பட்டுள்ளது.
பிளஸ் 2 செய்முறைத் தேர்வுக்கான மாணவர்களின் பதிவு எண் பட்டியல் ஜனவரி 27-ஆம் தேதி வாக்கில் தயாராகும் எனத் தெரிகிறது.

சிறிய மாவட்டங்களில் செய்முறைத் தேர்வு பிப்ரவரி முதல் வாரத்திலேயே நிறைவடைய வாய்ப்புள்ளதாகவும், பெரிய மாவட்டங்களில் பிப்ரவரி 1 முதல் 18 வரை நடைபெற வாய்ப்புள்ளதாகவும் அதிகாரிகள் தெரிவித்தனர். பிளஸ் 2 பொதுத்தேர்வு தமிழகம் முழுவதும் மார்ச் 1-ஆம் தேதி தொடங்க உள்ளது. தமிழகம் முழுவதும் 8 லட்சத்துக்கும் அதிகமான மாணவர்கள் இந்தத் தேர்வை எழுத உள்ளனர்.

பொதுத்தேர்வுக்குப் போதிய இடைவெளி வழங்கும் வகையில் பிப்ரவரி 18-ஆம் தேதிக்குள் செய்முறைத் தேர்வுகளை முடிக்க வேண்டும் என்று உத்தரவிடப்பட்டுள்ளது.

நாடு முழுவதும் பெண்களுக்கான அவசர உதவி எண் 181

பெண்களுக்கான அவசர உதவி தொலைபேசி எண்ணாக 181 அறிவிக்கப்பட்டுள்ளது. நாடு முழுவதும் இதே எண்ணைப் பயன்படுத்தவும் மத்திய அரசு வகை செய்துள்ளது.

இது குறித்து மத்திய தொலைத்தொடர்புத் துறை அமைச்சர் கபில் சிபல் செய்தியாளர்களிடம் திங்கள்கிழமை கூறுகையில், "நாடு முழுவதும் பெண்களுக்கான அவசரகால உதவி எண்ணாக 181 அறிவிக்கப்பட்டுள்ளது'' என்றார்.

இது தொடர்பாக, 181 என்ற மூன்று இலக்க எண்ணை அனைத்து மாநிலங்களிலும், பெண்களுக்கான அவசர உதவி எண்ணாகச் செயல்படுத்த மாநில அரசுகளுக்கு கபில் சிபல் கடிதம் மூலம் வலியுறுத்துவார் என எதிர்பார்க்கப்படுகிறது.

இந்த எண் ஒதுக்கப்பட்ட பிறகு, மாநில அரசுகள் இதற்கான மையத்தை அமைக்க வேண்டும். தில்லியில் மாணவி பலாத்காரம் செய்யப்பட்டதை அடுத்து, பெண்களுக்கான அவசர உதவி எண்ணாக 167 அறிவிக்கப்பட்டது. பிறகு, எளிதில் நினைவில் கொள்ளும் வகையில் 181 என மாற்றப்பட்டுள்ளது.

Friday, January 18, 2013

சென்னை மெட்ரோ ரெயில் நிறுவணத்தில் வேலை வாய்ப்பு

மத்திய மாநில அரசுடன் இணைந்து செயல்படும் சென்னை மெட்ரோ ரெயில் நிறுவணம் பல்வேறு துறைகளுக்கு ஆட்களை பணியில் சேர்க்க உள்ளது. இது குறித்து சென்னை மெட்ரோ ரெயில் நிறுவனம் விளம்பரம் வெளியிட்டுள்ளது.இதற்கு ஆன்லைன் பதிவு 19-1-2013 லிருந்து துவங்குகின்றது. chennaimetrorail.gov.in என்ற இணையதள முகவரில் விருப்பம் உள்ளவர்கள் வேலைக்கு விண்ணப்பிக்கலாம். விண்ணப்பிப்பதற்கு கடைசி நாள் 20-2-2013. முஸ்லிம்களுக்கு தனி இட ஒதுகிடு உள்ளது

இது குறித்து முழு விபரம் அறிய http://chennaimetrorail.gov.in/jobposting.php 

http://chennaimetrorail.gov.in/Advt-01-2013.pdf

Thursday, January 17, 2013

'குட் நியூஸ்'.. மானிய விலை சிலிண்டர்களின் எண்ணிக்கை 6ல் இருந்து 12 ஆக உயர்கிறது!

டெல்லி: வீட்டு உபயோகத்திற்காக வழங்கும் மானியவிலை சமையல் எரிவாயு சிலிண்டர்களை ஆண்டுக்கு 12 ஆக உயர்த்தி வழங்க மத்திய அரசு திட்டமிட்டுள்ளது. அதே சமயம் சிலிண்டர்களின் விலையை மாதந்தோறும் 50 ரூபாய் உயர்த்தவும் மத்திய அரசு முடிவு செய்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
மத்திய அரசு மானிய விலையில் வழங்கும் சமையல் கேஸ் சிலிண்டர்களின் எண்ணிக்கையை ஆண்டுக்கு 6 ஆக குறைக்கப்பட்டுள்ளது. அதற்கு மேல் தேவைப்படுபவர்கள் கூடுதல் விலை கொடுத்து மானியம் அல்லாத விலையில் சிலிண்டர்கள் பெற்றுக் கொள்ளலாம். 
இதற்கு நாடு முழுவதும் எதிர்ப்பு கிளம்பிவருவதால் மானியவிலை சிலிண்டர்களின் எண்ணிக்கையை 12 ஆக உயர்த்த அரசு திட்டமிட்டுள்ளது. இது தொடர்பான பரிந்துரை மந்திரி சபையின் இறுதி முடிவுக்காக பாராளுமன்றத்தின் இருஅவைகளிலும் வைக்கப்பட்டுள்ளதாக அதிகாரி ஒருவர் தெரிவித்தார். 
தற்போது மானிய விலை சமையல் கியாஸ் சிலிண்டர்களின் விலையை ஒரு சிலிண்டருக்கு ரூ.130 உயர்த்த பரிந்துரை செய்யப்பட்டுள்ளது. அதை மாதந் தோறும் ரூ.50 என்ற அளவில் உயர்த்தலாமா என ஆலோசிக்கப்படுகிறது.
டீசல் விலை உயரும்:
அதேபோல் டீசல் விலையை ஒரேயடியாக லிட்டருக்கு ரூ.4.50 என உயர்த்தாமல் 4 மாதங்கள் முதல் 9 மாதங்கள் வரை மாதம் 60 பைசாவிலிருந்து ரூ.1.50 வரை உயர்த்தவும் திட்டமிடப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

For more details about mayakulamnews

Wednesday, January 16, 2013

முஹம்மது சதக் பாலிடெக்னிக் க‌ல்லூரியில் 20/01/13 ஞாயிறு அன்று வேலை வாய்ப்பு முகாம்!

முஹ‌ம்ம‌து ச‌தக் பாலிடெனிக் க‌ல்லூரி சார்பில் வெளியிட்டுள்ள‌ செய்தி குறிப்பில் ....
முஹ‌ம்ம‌து ச‌த‌க் க‌ல்லூரியில் வெளிநாட்டு நிறுவ‌ன‌மான‌ அவ‌லான் டென்க்னால‌ஜியில் ப‌ணி புரிய‌ வேலை வாய்ப்பு முகாம் 20 1 2013 அன்று ஞாயிற்று கிழ‌மை காலை 9 ம‌ணிய‌ள‌வில் ந‌டைபெறுகிற‌து.


இத்தேர்வில் டிப்ள‌மா மின்னிய‌ல் ம‌ற்றும் மின்ன‌னுவிய‌ல் ம‌ற்றும் தொட‌ர்பிய‌ல் துறை ம‌ற்றும் எலக்ட்ராணிக்ஸ் இன்சுமென்ரேச‌ன் ப‌டித்து 2010/2011/2012 தேர்ச்சியடைந்த‌வ‌ர்க‌ள்/தேர்ச்சிய‌டையாத‌வ‌ர்க‌ள்,ஐடிஐ ம‌ற்றும் டிகிரி பிஏ பி.எஸ்.சி முடித்த‌வர்க‌ள் க‌ல‌ந்து கொண்டு ப‌ய‌ன‌டையலாம்.தேர்வுக்கு வ‌ருப‌வ‌ர்க‌ள் த‌ங்க‌ள‌து பாஸ்போர்ட் சைஸ் போட்டோ 3, க‌ல்வி சான்றித‌ழ் ம‌ற்றும் வ‌ய‌து சான்றித‌ழ் ந‌க‌ல்க‌ளுட‌ன் வ‌ர‌ கேட்டு கொள்ள‌ப்ப‌டுகிறார்க‌ள். இம்முகாமிற்கான‌ ஏற்பாடுக‌ளை க‌ல்லூரி சார்பில் முத‌ல்வ‌ர் பேராசிரிய‌ர் அலாவுதீன் ம‌ற்றும் துணை த‌லைவ‌ர் சேக் தாவுது உள்ளிடோர் செய்துள்ள‌ன‌ர்.
google-site-verification: googlee59dddba6405f270.html